17. ஒரு கூட்டுக் கிளிகள் - ராசு
அன்று இரவு விஸ்வநாதனின் வீட்டில் விருந்தாளியாய் தங்கிய பாலச்சந்தரின் குடும்பம் மறுநாள் காலையிலேயே புதிதாக வாங்கிய வீட்டில் பால் காய்ச்சினர்.
சிறிய ஓட்டு வீடுதான். இருந்தும அழகாய் இருந்தது. மறுநாள் விஸ்வநாதன் குடும்பத்திற்கு விருந்தளித்தனர். ஆனால் வந்ததில் இருந்து தன் தமக்கையின் செயலில் பாதிக்கப்பட்டிருந்த பாலச்சந்தருக்கு மனதே ஆறவில்லை.
“அக்கா கேட்டிருந்தா எல்லாத்தையும் கொடுத்திருப்பேன் விசு. ஆனால் ஏன் இப்படி நடந்துக்கிட்டாங்கன்னு தெரியலை. அவங்களுக்கு கோபம் வர்ற மாதிரி என்ன செஞ்சேன்னு தெரியலை. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.”
...
This story is now available on Chillzee KiMo.
...
“இது ஏன் நமக்கு தோணாம போச்சு? இது நல்ல ஐடியாவா இருக்கே. அதிகமா வேலைக்கு போறவங்கதான் இங்கே குடி வந்திருக்காங்க. ஒரு கடை கண்ணிக்குப் போகனும்னாலும் டவுனுக்குள்ளதான் போக வேண்டியிருக்கு.” பாக்கியம் சொல்ல
“ஆமாண்ணி! இன்னிக்கே இந்த வேலையை ஆரம்பிச்சுப் பார்ப்போம்.” என்று பரபரப்பானாள்.