என்னதான் அகதன் மித்ரனுடன் சேர்ந்து இவளிடம் ஆலோசிக்காமல் திட்டமிட்டிருந்தாலும்….. இவள் மனதுக்கும் அறிவுக்கும் தெரியாதா அதன் முழு நோக்கம் இவள் நன்மையும் பாதுகாப்புமே என்பதாய் இருக்குமென்று….. அதோடு மித்ரன் தான் இதில் எய்தவன் அகதன் வெறும் அம்பாகத்தான் இருக்க முடியும்…..மித்ரன் ‘மனுக்கு இப்டி ப்ரச்சனையாகிடும் அப்டி ஆபத்தாகிடும்’னு சொன்னா அகதன் மிரளத்தானே செய்வான்…..இவ மேல அகிக்கு உள்ள பாசம் பத்தி தெரியாதா என்ன… ஆக இப்பொழுது கெஞ்சலும் அதட்டலுமாய் அகதன் இவள் கண்களை துடைக்க…. மனோவின் மனதிற்குள் ஏறி இருந்த கோபம் சற்றே சற்று மட்டுப்பட்டது.
கண்ணீரை துடைத்த அண்ணன் கையில் ஓர் அடி…..
“ஆமா அத்தனை முக்கியமான என்ட்ட எதுவும் சொல்லாம, அப்டி முக்கியம் இல்லாத அவர் கூட சேர்ந்து ட்ராமா ப்ளான் பண்ணிட்டு எனக்கு வெறும் ஹிண்ட் மட்டும் குடுப்ப என்ன?....போ பேசாம போய்டு…உன் ஆசை மாப்ள அடுத்த ரூம்ல தான் இருப்பார்……அங்கயே போய் இரு… இந்தா இந்த பால்கனிலதான் பதுங்கி கிடக்கும் உன் ப்ளாக் அண்ட் வொயிட் புலி…போ போய் அடுத்து எப்டி என் கையால அடிவாங்கலாம்னு அதுக்கு ஐடியா கொடு….” குத்தலும் கோபமும் சர்காசமுமாக இவள்…
இவளுக்கு அகதன் மேல் உள்ள கோபத்தின் அடிப்படை காரணமும் இதுதான்….என்னதான் மித்ரன் பெரிய ப்ரச்சனைனு அகிட்ட சொன்னாலும்….என்ட்ட சொல்லாம அகி எப்டி மித்ரன் கூட கூட்டு சேரலாம்? அதுவும் என்னை தனியா விட்டுட்டு…? இவனுக்கு என்னைவிட இப்ப வந்த மித்ரன் தான் ரொம்ப க்ளோஸா? அப்டி எந்த விஷயத்தை நான் புரிஞ்சுக்காம போய்டுவேன்னு இவங்க ரெண்டு பேரும் நினச்சாங்க…..??
ரெண்டு ஆண்கள் மீதும் இருக்கிறது இவளுக்கு இந்த கோபம்….மித்ரனும் இவட்ட விஷயத்தை சொல்லாம அகதன்ட்ட தான் சொல்லியிருக்கான்……அகியும் அப்டித்தான் இவளை டீல்ல விட்டாச்சு…. ஆனாலும் மித்ரனுடன் ஒப்பிடும் போது அகியின் தப்பு கொஞ்சம் சின்னதுதான்…. ஏன்னா மித்ரன்… இவள் மனம் ஓடிக் கொண்டிருக்க இவளது இதற்கு முந்திய வார்த்தைகளுக்கு பதில் சொல்ல தொடங்கினான் அகதன்…
“மித்ரன் இங்க இல்ல மகி….” அகதன் என்ன சொல்ல வந்தானோ…..ஆனால் அவ்வளவுதான் அவ்வளவேதான்…..அதற்கு மேல் ஒன்றையும் காதில் வாங்கும் நிலையில் இல்லை இவள்…..இதுவரை அவளுக்குள் இருந்த அத்தனை கோபமும் அதுவரை கண்டிராத அடுத்த நிலை உச்சத்தை தொட….கத்திவிட்டாள் கத்தி….
“இப்ப இங்க இருந்து நீ போறியா…இல்ல நான் இப்டியே கிளம்பி போய்டவா?” வேக வேகமாக இவள் போய் அந்த அறையின் கதவை திறக்கப் போக….
“மகி’ என ஒரு கணம் ஸ்தம்பித்துப் போய் பார்த்த அகதன்….”உன் மூடு சரியில்லை…… நான் அப்றமா வந்து பேசுறேன்….இப்ப எதையும் போட்டு குழப்பிக்காம சாப்டுட்டு முடிஞ்சா தூங்கு….” இவளை பரிதாபமும் பாசமுமாய் பார்த்தபடி அவன் கிளம்பிப் போனான் பால்கனிக்கு….
மெத்தையில் போய் குப்புற விழுந்தாள் இவள்….
இந்த மித்ரன் என்னப் பத்தி என்ன நினச்சுகிட்டு இருக்கான்????? இழுத்த இழுப்புக்கெல்லாம் வர்ற பொம்மலாட்ட பொம்மையா நான்? அவன் வான்னா நான் வரனும் போன்னா போயிடனும்….அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் நான் ஆடனும்….அவன் காரணம் சொல்லாமலே கூட, அவனை நம்பி நான் இவ்ளவு தூரம் வரனும்…..அவன் மட்டும் எதுவும் என்ட்ட சொல்ல மாட்டான் என்ன?
மித்ரன் போய்விட்டான் என்பது ஒரு பக்கம் ஏமாற்றமாக இருக்கிறது என்றால் அடுத்த பக்கம் அவன் சொல்லாமல் சென்ற விதம் கொதிக்கிறது இவளுக்கு…..கூடவே அந்த மித்ரனுக்கு சிங்க் சா போடுற இந்த அகியோட பிகேவியரும் தான்……சற்று நேரம் அப்படியே விழுந்து கிடந்தாள்…..வேற என்ன செய்ய?
மனதிற்குள் நடந்த அனைத்தும் நினைவு நதியாய் பாய…. அன்று மித்ரனைப் பார்க்க இவள் வர்ஷன் அறைக்கு சென்ற போது நடந்த ஒவ்வொன்றும் அக கண்களில் காட்சியாய் விரிகின்றது இப்போதும்….
விஜிலா அன்று காலை இவள் ஆஃபீஸ் கிளம்பும் முன் மித்ரனைப் பற்றி பேசியதும் இவளுக்குள் மித்ரன் இவளுடனும் இவள் குடும்பத்தினருடனும் பழகும் விதம் தவிர அவனைப் பற்றிக் கேள்விப் படும் அனைத்தும் சரியில்லையே என்று தோன்றினாலும்….…..அவனை நம்ப இன்னும் காரணம் இருக்கிறது இவளிடம்….
நிற்காமல் சிந்திக்கும் ஜிகா ப்ராசசர் மைன்ட் ஆச்சே இவளது…. அதன் சிந்தனை ஓட ஓட மித்ரன் மேல் நம்பிக்கைத்தான் கூடிக் கொண்டு போகிறது…..மித்ரனை காண செல்லும் வழி எல்லாம் பல கோணத்தில் ஓடுகின்ற சிந்தனை அலைகள்…
முதல் காரணம் மித்ரன் உண்மையில் தப்பானவனாக இருந்தால்…. இவள் அவனை கல்யாணம் செய்ய கூடாது என நினைக்கும் நபர் விஜிலாவைப் போல நேருக்கு நேராக இவளை சாட்சியங்களுடன் சந்தித்திருந்தாலே போதும்….
அந்த டிவோர்ஸ் ஃபைலை நேருக்கு நேரா கொண்டு வந்து கொடுத்திருக்கலாமே…..ஏன் ட்ரைப் பண்ணா மித்ரன் மகிபாவோட ஃபோட்டோஸ் விடியோஸ் கூட கிடச்சிருக்குமே உண்மையில் மித்ரன் வாழ்க்கையில் அப்டி ஒரு மனைவி இருந்திருந்தால்?? அதைவிட்டுட்டு வெறும் சர்டிஃபிகேட்ஸ்….அதுல ஃபேக் ரெடி பண்ண எவ்ளவு நேரம் ஆகும்??