சரியாக அந்த நொடியில் ஒலித்தது அவனது கைப்பேசி. வெளிநாட்டில் இருந்து அழைப்பு. அழைத்தவன் அவனது உயிரின் இன்னொரு பகுதி. சஞ்சா!!!.
'டேய்...ரிஷி.. என்னடா??? இங்கே ஃபேஸ்புக்லே என்னென்னமோ.........??? என்னடா???' பதற்றத்தின் உச்சியில் நின்றுக்கொண்டு பேசிக்கொண்டிருந்தான் அவன்.
'ம்???' கொஞ்சம் சிரித்தான் ரிஷி
'ரிஷி... என்னடா??? என்னாச்சுடா???
'உண்மைதான்...'
'உண்மையா???' ஜானகி அம்மா அவனை பெற்றவரா??? நானே அவரை அவனிடம் விட்டு வந்தேனே????
'ஜானகி அம்மாவா?? டே எனக்கு... சரி நீ.... நீ.... எப்படிடா இருக்கே???'
'எனக்கென்னடா??? ராஜா மாதிரி இருக்கேன்...'
'ரிஷி என்னடா??? எனக்கே ரொம்ப பயமா இருக்கு. உனக்கு ஒண்ணும் இல்லைதானே. நீ நல்லா இருக்கே இல்ல????' துடித்தான் அந்த உயிர் நண்பன்.
டேய்... வெங்காயம்... எனக்கு ஒண்ணுமில்லைடா.'
'நீ போனை அருந்ததி கிட்டே குடு..' அவனால் ரிஷியை நம்ப முடியவில்லை. மனம் ஆறவில்லை அவனுக்கு.
'ஹலோ...' அருந்ததியின் குரல் ஒலிக்க...
'என்னடா???? என்றான் சஞ்சா. 'ரொம்ப துவண்டு போயிட்டானா??? 'நான் நாளைக்கு கிளம்பி வரேன்.'
'இல்ல சஞ்சா. ஒண்ணுமில்லை. முதலிலே கொஞ்சம் ஷாக். இப்போ சரியாயிட்டான். நீ உன் ட்ரிப் முடிச்சிட்டு வா. அஹல்யா பாவம். அவளை ஏமாத்தாதே. நாங்க இங்கே சமாளிச்சுப்போம்'
'அதுக்கில்லைடா... எனக்கு மனசு கேட்காது. சரி யோசிக்கிறேன். நீ அவனை பத்திரமா பார்த்துக்கோடா...' திரும்ப திரும்ப பலமுறை அதையே சொல்லிவிட்டுதான் அழைப்பை துண்டித்தான் சஞ்சா.
ரிஷி அந்த அறையை விட்டு வெளியே வந்தான் 'நான் போயிட்டு வந்திடறேன் பா..' என்று சொல்லியபடியே பத்திரிக்கையாளர்களை சந்திக்க கிளம்ப......
'நானும் வரவா பா??? சந்திரிக்கா கேட்க,
'நீ எதுக்குமா??? நான் பார்த்துக்கறேன்..' அவன் சொல்லி முடித்த நொடியில்.... சந்திரிக்காவின் கண்முன்னே சட்டென வந்து போனது அந்த கனவு. சில நாட்களுக்கு முன் அவருக்கு வந்த அந்த கனவு!!!!
அடுத்த அத்தியாத்துடன் நிறைவு பெறும்.......
My dear friends. இந்த எபிசொட்லே சொல்ல வேண்டியது எல்லாம் சொல்லி முடிக்க முடியலை. அதனாலே அடுத்த எபிசொட் தான் ஃபைனல் எபிசோட். இந்த எபிசொட் படிச்சிட்டு உங்களுக்கு என்ன தோணுதுன்னு சொல்லுங்க. eagerly waiting for your comments my dear friends . thanks a lot'
{kunena_discuss:886}