“வேண்டாம் அத்தே. தயவு செய்து இப்படி எல்லாம் பேசாதீங்க. நீங்க எனக்கு வேணும். எனக்கு இன்னொரு தாயா நீங்க இருந்தீங்க.”
“எனக்கு நீ மருமகளா கிடைச்சது ஒன்றுதாம்மா எனக்கு சந்தோசம். முடிஞ்சா என்னை மன்னிச்சிடு.”
மகன் பக்கம் திரும்பவே இல்லை.
அதன் பிறகு அவர் நீண்ட நேரம் இருக்கவில்லை.
மாமியாரின் முடிவு தெரிந்த திவ்யா கதறி அழ ஆரம்பித்தாள். ஜெயந்தன் ஸ்தம்பித்து நின்றுவிட்டான்.
நாத்தனாரின் துணைக்காக அவர் வீட்டில் விட்டுவிட்டு வந்த சுஜயா அலங்கோலமாக உள்ளே நுழைந்ததும் சரஸ்வதி அதிர்ந்து நின்றாள். சிறிது நாட்களாக அவள் சுஜயாவுடன் சரிவர பேசாததால் அவளும் தாயை எதிர்பார்க்காமல் அறைக்குள் நுழைந்
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
பாலச்சந்தரின் கரிசனையான குரல் எதுவுமே சரஸ்வதிக்கு எட்டவில்லை.
அவள் சுஜயாவின் முகத்தை உறுத்து விழித்தாள்.
“குடிகேடி. குலத்தையே நாசம் பண்ண வந்த கோடாரிக்காம்பு மாதிரி இன்னும் எத்தனை குடியைக் கெடுக்கப் போகிறாய்?”
தாயின் ஆங்காரக்குரலில் புரியாமல் திகைத்து விழித்தாள்.