“என்ன சரசு? புள்ளைக்கிட்ட என்ன கேட்குறோம்னு தெரிஞ்சுதான் பேசறியா?” கோபமாக கேட்டார் பாலச்சந்தர்.
“நீங்க பேசாம இருங்க. உங்களுக்கு எதுவும் தெரியாது.” கணவனை அடக்கினாள்.
“என்ன தெரியாது? நீ பேசறதோட அர்த்தம் என்னன்னு கூட நம்ம பொண்ணுக்கு தெரியாது. அவகிட்ட போய் என்ன பேச்செல்லாம் பேசறே? உனக்கு என்னாச்சு?”
“எனக்கு என்ன ஆகனும்? நானும் பாக்கியம் அண்ணி மாதிரி, உங்க அக்கா மாதிரி போயிருக்கனும். போகாம இவ நடத்தையை பார்த்து வேதனைப்படனும்னு என் தலையில் எழுதியிருக்கே?”
“நீ வேதனைப்படற அளவுக்கு என் மக நடத்தை எப்படி இருக்கு?”
கேட்ட கணவனை வேதனையுடன் பார்த்தாள்.
“சொல்லுடி.” கோபமாக மனைவியை உலுக்கினார்.
அவள் தள்ளிப்போய் விழுந்தாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
அங்கேதான் ஒரு நோயாளியிடம் அணுசரனையாக பேசிக்கொண்டிருந்த சுஜயாவைக்கண்டான். பார்த்த உடன் அவள் உருவம் அவன் மனதில் பதிந்துவிட்டது. வெள்ளை உடையில் இருப்பதால் அவள் ஒரு நர்சாக வேலை பார்ப்பாள் என்று எண்ணினான்.
என்ன வேலை செய்தால் என்ன? அவளை அவனுக்கு பிடித்திருக்கிறது. அதுதானே முக்கியம்.