கை பற்றி இருந்தவர் கைகளை தானுமாய் பற்றிக் கொண்ட வினி “ ஆனா நீங்க என்னை உங்க பொண்ணு மாதிரியே நினைக்கலம்மா” என்றாள் அவர் முகத்தையே பார்த்தபடி….
ஒரு கணம் திகைத்தது போல் பார்த்தாலும் அடுத்த நொடி அவள் சொல்வதின் அர்த்தம் புரிய அவர் முகத்திலும் புன்னகை வந்துவிட்டது.
“ஆமா என் அம்மான்னா வெளிய போன பொண்ணு திரும்பி வர லேட்டாச்சுன்னா என்னாச்சுன்னு தேட மாட்டாங்களாம்மா?.....பிறகு அதுக்கு இப்டியா தனியா கூப்டு கூப்டு விளக்கம் சொல்லுவாங்க…..?” இவள் கேள்வியில்
“புதுசு இல்லையாமா நீ இந்த வீட்டுக்கு…அதான் எப்டி எடுத்துப்பியோன்னு சொல்லிட்டேன்…..இனி சொல்லலை போதுமா?” அவர் தான்.
“நானும் புதுசு இல்லையா…அதான்…..இனிமே ஓடிப் பிடிச்சு விளையாட எங்கயாவது போய் ஒளிஞ்சுகிட்டேனா கூட உங்கட்ட மட்டும் சீக்ரெட்டா சொல்லிட்டுப் போறேன் ஓகேவா?” கண் சிமிட்டினாள் அவரது வால் மருமகள்.
பதிலாக செல்லமாய் அவள் கன்னம் தட்டியவர் அவளது பாதுகாப்பிற்காக சின்னதாய் ஜெபம் செய்து அனுப்ப யவ்வனைத் தேடி தங்கள் பகுதிக்கு வரும் போது படு துள்ளலாக வந்தாள் அவள்.
எத்தனையோ விஷயங்களுக்காக எல்லையில்லா சந்தோஷம்…..
அவர்கள் பகுதி வரவேற்பறையில் இருந்த அவனைப் பார்த்து “ஹாய் யவி டார்லிங்” என்றபடி முந்திய நாள் அவள் சென்று அடைத்துக் கொண்ட ரூமுக்குள் நுழைய
“நீ இதெல்லாம் நிஜமாத்தான் செய்றியா இல்ல சீக்ரெட்டா அடுத்த ஆப்பு ரெடி பண்றியான்னு எனக்கு சந்தேகமாவே இருக்கு வினு” என அவள் சென்ற ரூமைப் பார்த்து இவன் சொன்னான்.
அங்கு குளியலுக்கு தேவையான தனக்கான மாற்றுடைகளை எடுத்துக் கொண்டிருந்த அவளோ “சந்தேகமே வேண்டாம்…கண்டிப்பா ஆப்புதான் ரெடி பண்ணிட்டு இருக்கேன்……எப்ப உங்களுக்கு விளையாடிப் பார்க்கனும்னு தோணிட்டோ…..அப்பவே நல்ல வைஃபா உங்க ஆசைய நிறைவேத்தி வைக்றதுன்னு முடிவு பண்ணிட்டேன்…..” என்றாள் ஒருவிதமாக….
“ஹேய் நான் அப்டில்லாம் சொல்லவே இல்லைடா….ஜஸ்ட் இன்னைக்கு ஒருநாள்னு தான் மீன் பண்ணேன்….” பதறியபடி இப்போ இவன் அவள் எதிரில் ஆஜர்…. திரும்பவும் அவள அப்டி நைட்டு முழுக்க தேடவோ அதே அளவு தவிக்கவோ அவனுக்கு தாங்காதே….
“நோ நோ நான் முடிவு செய்தா செய்ததுதான்…. அதுல சாரி கேட்கிற அளவுக்கு நீ எதுவுமே செய்யலையேன்னு வேற இன்னைக்கு சொல்லி வருத்தப்பட்டுடீங்க…. அதை நீங்க சொன்னப்பவே முடிவு செய்துட்டேன்….. சாரி கேட்குற அளவுக்குத்தான கண்டிப்பா வச்சு செஞ்சுடுவோம்னு….”
“வருத்தமா எப்போ” என ஆரம்பித்தவனுக்கு அவன் அதை இன்று அழுதுகொண்டிருந்த அவளை ஆறுதல் படுத்த சொல்லியது ஞாபகம் வருகிறது.
கூடவே இதுவரை ஒரு பயஇறுக்கத்தில் இருந்தவள் இப்பவாவது தன் ஷெல்லை விட்டு வெளிய வர்றாளே என்றும் அவனுக்கு தோன்றுகிறது….
அவன் பார்வையில் இருந்த விளையாட்டுத்தனம் விடை பெற மென்மை வந்தமர்கிறது அவ்விடத்தில்….
“என்ன ஆச்சு வினு? இவ்ளவு நாளும் உனக்கு என்ன ப்ரச்சனை?” என்றான்.
இப்போது எழுந்து கொண்ட அவளோ…. “ப்ரச்சனைனு இல்ல யவி……அது ஒரு பயம் அவ்ளவுதான்…..ஆனா ரொம்ப ஆழமான பயம்….” என நடந்ததை ஆரம்பித்தாள்.
“எனக்கு நீரான்னு பவி அளவுக்கு இன்னோரு க்ளோஸ் ஃப்ரெண்ட் உண்டு…”
“நீரான்னா நீரதாவா?” என இடையிட்டான் கணவன்.
“இல்ல இவ பேரு நீராஞ்சலி….நீரான்னு கூப்டுவோம்….என்னை மாதிரி அவளும் அவங்க வீட்டுக்கு ஒரே பொண்ணு…..அவங்க வீடு ரொம்பவே வசதி….யூஜி முடிக்கவும் அவளுக்கு மேரேஜ் செய்து வச்சாங்க…..அரேஞ்ச்ட் மேரேஜ்தான்…..அதுவும் மாப்ள அவங்களுக்கு தூரத்து சொந்தமும் கூட…. மாப்ள வீட்ல இருந்து ரொம்ப விரும்பி கேட்காங்கன்னுதான் பிஜி பண்ணப் போறேன்னு சொன்ன அவளை மேல படிக்க வேண்டாம்னு சொல்லி கல்யாணம் செய்து வச்சாங்க…. முதல்ல கொஞ்ச நாள் எல்லாம் நல்லா இருக்க மாதிரிதான் இருந்துச்சு…..ஆனா அவ ப்ரெக்னன்டா ஆனதிலிருந்தே உன் வீட்ல இருந்து அந்த சொத்தை எழுதி வாங்கு இந்த சொத்தை உன் பேருக்கு மாத்த சொல்லுன்னு அவ ஹஸ்பண்ட் ஒரே சண்டை…. முத வேலையா நீரா அப்பாவோட மரக்கடைய தனக்குன்னு எடுத்துக்கிட்டான் அந்த ஆளு…..
அவன் நீராவ அடிப்பான் போல….அத சகிக்க முடியாம நீரா வீட்லயும் கிட்டதட்ட எல்லா சொத்தையும் அவ பேருக்கே மாத்திட்டாங்க….. இதுக்கு இடையில குழந்தை பிறக்க அவ அம்மா வீட்டுக்கு வந்துட்டுப் போனா…..பெண் குழந்தை அவளுக்கு…..நானும் அவளும் சேர்ந்துதான் ஆரதனான்னு குழந்தைக்கு பேர்லாம் கூட செலக்ட் செய்தோம்…..குழந்தை பிறந்து 5 மாசத்துல திரும்பிப் போனா அவ ஹஸ்பெண்ட் வீட்டுக்கு….
இந்த டைம் அவள தனிக் குடித்தனம் வச்சுட்டு அதுவரைக்கும் கூட இருந்த மாமியார் நாத்தனார்லாம் பக்கத்துலே வேற வீட்டுக்கு போய்ட்டாங்க……நாங்க கூட இது நல்லதுக்குன்னு தான் நினச்சோம்….ஏன்னா அவங்களும் நீராவ கொத்தி பிடுங்கிகிட்டுதான் இருப்பாங்க….