அஞ்சலி திருதிருவென விழித்தாள்.
“என்னடி முழிக்கிற, ஏன் எதுவும் பண்ணல?”
“இல்லம்மா பாவம் அவரு, அவரு என்ன பண்ண முடியும் அவரு சொல்லுறது சரின்னு பட்டுச்சு, அதான்...” என்று அவள் பேசி முடிப்பதற்க்குள் கண்ணத்தில் பளார் என்று அறை விட்டாள் காவேரி. அவள் அடித்த வேகத்தை நாற்காலியால் கூட தாங்கிக்கொள்ள முடியவில்லை. தரையில் நாற்காலியுடன் பொத் என்று விழுந்தாள். முகத்தின் இடப்பக்கம் தரையில் அடித்தது. வலி தாளாது மீண்டும் அழத்துவங்கினாள்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்...
அன்னா ஸ்வீட்டியின்யின் மனம் கொய்தாய் மனோஹரி... - When U Marry a stranger…
படிக்க தவறாதீர்கள்...
“இந்த அழுகைய அங்க காட்டிருக்க வேண்டியதன..இனி உன்ன நம்பி பிரயோஜனம் இல்ல... போன எடு நான் சொல்லுற மாதிரி வாட்ஸ்ஆப் பண்ணு..”
இடப்புற முகத்தில் கை வைத்தவாரே எழுந்து அமர்ந்தாள் அஞ்சலி.
“போன் எடுடி.. பேக்கு மாதிரி கண்ணத்துல கை வச்சுட்டு உட்காந்திருக்க..”
அவளுடன் சேர்ந்து கீழே விழுந்துகிடந்த போனை எடுத்தாள்.
“ம்ம்ம் அவனுக்கு மெஸ்ஸேஜ் அனுப்பு..”
...
“என்ன டைப் பண்ணிருக்க எனக்கு காட்டிடு அனுப்புடி”
‘ஹாய்’ என இருந்தது. காவேரி மீண்டும் அஞ்சலி தலையில் ஒரு அடி விட்டாள். சரிந்து கிடந்த நாற்காலியில் கால்களில் அவளது தலை அடித்து. வலியில் துடிதுடித்தாள் அஞ்சலி/
“இதுனால தான்டி அவன் அப்புறமா கல்யாணம் பண்ணலாம்ன்னு சொல்றான்.. ஒரு பையன எப்படி மடக்குறதுன்னு கூட தெரியல” என்று அவளிடம் போனை வெடுக்கென்று பிடுங்கினாள்.
காவேரி தானாக டைப் செய்து அனுப்பினாள் “ஹாய் டா செல்லம்”
அங்கே ஸ்ரீமதியிடம் தனக்கு கல்யாணம் இப்பொழுது வேண்டாம் எனக் கூற சென்றிருந்த மணியின் போன் அலறியது, வாட்ஸ்ஆப் மெஸ்ஸேஜ். அஞ்சலின் எண்ணிலிருந்து, ‘ஹாய் டா பேபி..’
அதைப் பார்தது, தான் ஏன் வந்தோம் என்பதை மறந்து, காதல் வெள்ளத்தில் மூழ்கினான்.
“ஹாய் டி செல்லக்குட்டி”
காவேரி மீண்டும் டைப் செய்து கொண்டிருந்தாள், அஞ்சலியின் போனிலிருந்து. பக்கத்தில் வலி தாங்க முடியாமல் அஞ்சலி அலறி அழுதுக்கெண்டிருந்தாள்.
மணி அஞ்சலியின் மெஸ்ஸேஜிற்காக காத்திருந்தான். அப்பொழுது ஸ்ரீமதியின் போன் அலறியது, புது எண்ணிலிருந்து.
தொடரும்...
Mano is continuing the story from where it was let off. Appreciate your comments but no comparisons between the writers please...
{kunena_discuss:740}