(Reading time: 19 - 38 minutes)

செந்திலுக்கும் யுக்தா அறையிலிருந்து வெளியில் வந்தது சந்தோஷம்... அதுமட்டுமில்லாமல் அவள் வீட்டில் வேலை மட்டும் செய்துக் கொண்டிருக்காமல்... மேலே படிக்கவோ இல்லை வேலைக்கோ செல்ல வேண்டும் என்று நினைத்தார்... அதை யுக்தாவிடமும் கேட்டார்... ஆனால் அவளோ இப்போது எனக்கு எந்த ஐடியாவும் இல்லை மாமா என்று கூறிவிட்டாள்... நிஜமாகவே திடிரென்று அவள் வாழ்க்கையில் ஏதேதோ நடந்ததால் அவள் மேற்கொண்டு படிக்கலாமா... வேலைக்குப் போகலாமா என்ற சிந்திக்கவே மறந்துவிட்டிருந்தாள்.

நீ முடிவெடுக்கும் வரை எங்க கம்பெனிக்கு வாம்மா... பிருத்வி என்ன சொல்லப் போறான்.... நான் பார்த்துக்கிறேன்ம்மா.." என்று செந்தில் கூறினார்... ஆனால் அதையும் யுக்தா மறுத்துவிட்டாள்... ஆனால் அவள் மறுத்தாலும் செந்தில் விட்டுவிடவில்லை.... அவள் அறையில் கம்யூட்டர் எல்லாம் வாங்கி அலுவலகம் போல் அமைத்து கம்பெனியிலிருந்து சில வேலைகளை வீட்டிலியே செய்யும்படி எடுத்து வந்து கொடுத்தார்... அவளும் அதை பொறுப்பாக செய்து கொடுத்தாள்...

மாதவன், சுஜாதா, சாவித்திரி மூவரும் அடிக்கடி யுக்தாவுக்கு ஃபோன் செய்து பேசினர்... ஆனால் இதுவரையிலும் கவி யுக்தாவை தொடர்புக் கொண்டு பேசவேயில்லை... யுக்தாவும் கவியை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபடவில்லை...

Related: You might also like...

G Adarsha's "My really really really really really REALLY weird story" - Come let us sneak peek into the mind of a ten year old kid...

Don't miss it... 

அதேபோல் வீட்டிலும் எல்லோருடனும் பழக ஆரம்பித்தாலும் பிருத்வியோடு யுக்தா மருந்துக்குக் கூட பேசவில்லை... பிருத்வியும் அவளைப் பார்த்தால் கோபப் பார்வை பார்த்தான்... பிருத்விக்கு செய்ய வேண்டிய வேலைகளை கூட மதி தான் செய்தாள்...

மதியோ இவர்களுக்குள் இன்னும் எந்த மாற்றமும் வரவேயில்லையே என்று கவலைக் கொண்டாள்... அன்னைக்கு பிருத்வி கோபப்பட்ட போது யுக்தா மௌனமாக இருந்து பிரச்சனையை பெரிதாக்காமல் இருந்ததை நினைத்து சந்தோஷப்பட்டாள்... ஆனால் இதே நிலைமை மாறாமல் இருக்கிறதே என்று கவலைக் கொண்டாள்...

மதியே யுக்தாவிடம் காஃபி கொடுத்து அனுப்புவது... அவன் இருக்கும் போது அயர்ன் செய்த ஆடைகளை அவன் அறையில் வைக்கச் சொல்லி அனுப்புவாள்... ஆனால் அதைக் கூட பிருத்வியிடம் பேசாமலேயே செய்துவிட்டு வருவாள் யுக்தா... அப்போதும் பிருத்வி அவளைக் கண்டால் கோபப்படுவான்... இவர்கள் சீக்கிரம் சரியாக வேண்டுமென்று மதி கடவுளிடம் வேண்டிக் கொண்டாள்.

இப்படி சில மாற்றங்கள் இந்த ஒரு மாதத்தில் ஏற்பட்டாலும் யுக்தா சந்தோஷமாக இல்லை... கவியோடும் பிருத்வியோடும் சமாதானமாகும் முயற்சியை அவள் செய்யவில்லை.... இருந்தாலும் என்னத்தான் மற்ற அனைவரிடமும் அவள் இயல்பு நிலைமைக்கு திரும்பினாலும் அவள் முக்கியமாக நினைக்கும் இருவரிடமும் பேசாமல் இருப்பது அவளுக்கு கஷ்டமாக இருந்தது... அப்படி என்ன காரணம் அவள் அவர்களை விட்டு ஒதுங்கியிருக்க என்று அவள் மனதுக்கு மட்டும் தான் தெரியும்...

அன்று அலுவலகத்தில் இருந்து சந்தோஷமாக வந்தான் பிருத்வி... சில நாட்களாக முகத்தை உர்ன்னு வைத்து கொண்டிருக்கும் அவன் இன்று சந்தோஷமாக இருந்தது மதிக்கும் செந்திலுக்கும் ஆச்சர்யமாக இருந்தது... அந்த சந்தோஷத்திற்கான காரணத்தை அவன் சொல்ல ஆரம்பித்தான்...

"அப்பா நாம எதிர்பார்த்த மாதிரி விஜய் குரூப் ஆஃப் கம்பெனியிலிருந்து பெரிய லெவல் ப்ராஜக்ட் கிடைச்சிருக்குப்பா..."

"என்ன சொல்ற பிருத்வி... அவங்க எப்பவும் VK கன்ஸ்ட்ரக்‌ஷன்க்கு தானே அவங்க ப்ராஜக்ட கொடுப்பாங்க... நான் கூட நமக்கு கிடைப்பது கஷ்டம்னு சொன்னேனே..."

"இருந்தாலும் அந்த கம்பெனி மேனேஜர் கிட்ட நான் பேசியிருந்தேன்ப்பா... இப்போ ஒரே டைம்ல ரெண்டு ப்ராஜக்ட் பண்ணப் போறாங்களாம்... அதனால சீக்கிரம் முடிக்கனும்னு ரெண்டு கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் கம்பெனிக்கு கொடுக்கப் போறாங்களாம்... நம்ம கம்பெனி பத்தி மேனேஜர் சொல்லியிருக்காரு... அவங்களுக்கு ப்ளான் பிடிச்சிருந்தா கன்சிடர் பண்ணலாம்னு சொல்லியிருக்க்காங்கப்பா..."

"ரொம்ப நல்லது பிருத்வி.... கொஞ்சம் கவனமா பிளான் வரைஞ்சு கொடுக்கனும்... அப்பதான் நமக்கு இந்த ப்ராஜக்ட் கன்பார்ம் ஆகும்..."

"ஆமாம்ப்பா.... சரி இந்தாங்க இதுல அவங்க பில்டிங் எப்படி எதிர்பார்க்கிறாங்கன்னு டிடெய்ல்ஸ் இருக்கு.... இதை உங்க மருமகக் கிட்ட கொடுங்க.... அவளுக்கு கொஞ்சம் வித்தியாசமான ஐடியாஸ் எல்லாம் வரும்... புதுசா எதாவது ப்ளான் போட்டுக் கொடுப்பா..."

"ஏண்டா இவ்வளவு தூரம் யுக்தா பத்தி தெரிஞ்சு வச்சிருக்கியே.... நீயே போய் இதை கொடுக்கலாமில்ல..." என்று மதி குறுக்கிட்டாள்.

"அம்மா சொல்றதும் சரி தானே பிருத்வி... இது நீயா எதிர்பார்த்த ப்ராஜக்ட் இதுல என்னென்ன பண்ணலாம்னு உனக்கும் ஏதாவது ஐடியா இருக்கும்... நீயே அவளுக்கு எக்ஸ்பெலியின் பண்ணா நல்லா இருக்கும்பா..."

"........"

"இங்கப்பாரு இந்த ப்ராஜக்ட் உனக்கு கிடைக்கனும்னு நீ நினைக்கிறல்ல... அப்போ நீயே அவக்கிட்ட சொன்னாதான் சரியா இருக்கும்... உனக்கு பிடிக்கலன்னா அப்புறம் உன் இஷ்டம்.."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.