இளவரசியின் பிறப்பால் பாண்டிய நாட்டிற்கு ஏற்படவிருக்கும் துன்ப விளைவுகளை மன்னரிடம் சொல்லாமல் இருப்பது என்ற முடிவுக்கு வந்து அதனை கண்களாலேயே தங்களுக்குள் பரிமாறிக் கொண்டனர்.மன்னரிடம் அவர்கள் கொண்டிருந்த பாசமும்,நேசமும்,உண்மை அறிந்தால் மன்னர் அடையக்கூடிய வேதனையையும் உணர்ந்தே அவர்கள் இவ்வாறு முடிவுக்கு வந்தனர்.அவ்வாறே செயல் பட்டனர்.
குழந்தையை மருத்துவச்சி உள்ளே தூக்கிச் செனறபிறகு மன்னரைப் பார்த்து அங்கிருந்த அனைவரும் இளவரசி பிறந்திருப்பதற்கும் மன்னர் தந்தையானதற்கும் தங்களின் வாழ்த்துக்களையு மகிழ்ச்சியையும் தெரிவித்தனர்.இளவரசி பிறந்திருப்பதாக நாடெங்கும் அறிவிக்க ஆணையிடப்பட்டது.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சித்ரா V யின் "காதலை உணர்ந்தது உன்னிடமே..." - காதல் கலந்த குடும்ப தொடர்....
படிக்க தவறாதீர்கள்...
மனதில் வேதனையையும் முகத்தில் பொய்யான மகிழ்ச்சியையும் கொண்டிருந்த ஜோதிடர்கள் மன்னரைப் பார்த்து....அரசர்க்கெல்லாம் அரசே...மன்னாதி மன்னரே...நாட்டு மக்களுக்கெல்லாம் நல்லாட்சி தருபவே,அறமும்,தருமமும்,வளமும் கொழிக்கும் பாண்டிய நாட்டை வளையாத செங்கோல் கொண்டு ஓர் குடையின் கீழ் இருந்து ஆட்சி செய்யும் கோமகனே..வாழ்க உமது புகழ்..வளர்க உமது கொற்றம்...உமைத் தந்தையாக்கிய பெருமைக்குரிய இளவரசியின் ஜாதகம் பார்த்து நாங்கள் அசந்து விட்டோம்.ஆஹா..ஆஹா..எப்பேர்ப்பட்ட பெருமைக்குரிய ஜாதகம் இளவரசியினுடையது.சாட்சாத் நம் பாண்டியனாட்டின் பேரரசியாய் விளங்கிய மீனாட்சியின் ஜாதகத்திற்கு ஒப்பானது.பேறும் புகழும் கொண்டவராய் விளங்கப் போகிறார் நம் இளவரசி.அவரின் காலத்தில் பாண்டிய நாடு மகோன்னத நிலையை அடையும் என அவரின் ஜாதகம் சொல்கிறது.இளவரசியின் ஜாதகம் போல் இன்னொன்றைக் காண்பது அரிது..என்றெல்லாம் மனமறிந்து மனம் நொந்தபடி மன்னரிடம் பொய் சொன்னார்கள் அங்கிருந்த ஜோதிட சிகாமணிகள்.
தாங்க முடியாத உவகையுடன் அனைத்தையும் கேட்ட மன்னர் அவர்களுக்குப் பொன்னும் பொருளும் அள்ளிக்கொடுக்க மனம் கூச அவற்றைக் கைகளில் ஏந்தினர் அவர்கள்.அப்பொன்னையும் பொருளையும் பயன்படுத்துவதில்லை என்றும் மனதிற்குள் முடிவு செய்தனர் அந்நல்லவர்கள்.
மனம் முழுதும் மகிழ்ச்சியோடு மகளை ஈன்றளித்த தன் மனைவி மகா ராணி ருக்மாவைப் பார்க்கவும் தங்கள் மகளின் அற்புதமான ஜாதகம் பற்றிச் சொல்லி மகிழவும் ஆசையோடு ராணியிருக்கும் அறைக்குள் நுழைந்தார் மன்னர்.பாவம் மன்னரே ஆனாலும் தந்தை அல்லவா அவர்....
உள்ளே வாயில் விரல் போட்டபடி தன் வரவால் பாண்டிய நாடு படப்போகும் பாடு என்னவென்பது அறியாமல் பெற்றவள் அருகில் கண்கள் மூடித் தூங்கிக் கிடந்தாள் குட்டி இளவரசி நன்றி..
தொடரும்...
{kunena_discuss:956}