ஒன்னும் தேவையில்லை..நா கல்யாணத்துக்கு அப்புறமே பாத்துக்குறேன் என்று கையை உருக முயற்சித்தாள்..
ஆனா குட்டிமா என்ன இப்படி காய விட்றதுக்கு வட்டியும் முதலுமா கல்யாணத்தன்னைக்கு நைட் இருக்கு உனக்கு என்றான் படு சீரியஸாய்,
ம்ம்ம்ம் அத அப்போ பாத்துக்குறேன் என்றபடியே அழகு காட்டிச் சென்றாள் மகி..அதனை ரசித்தவாறே அவளை பின் தொடர்ந்தான் ராம்..
அவர்கள் வெளியே வரவும் பரணி வரவும் சரியாக இருந்தது..என்னடா காலைலயே ஆரம்பிச்சுட்டீங்களா என்றபடியே அங்கிருந்த சேரில் அமர்ந்தான்..
குட்மார்னிங் னா..இதோ வந்துட்ரேன் என்றபடியே கீழே நழுவிச் சென்றாள் மகி..
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
VJ Gயின் "என் மனதை தொட்டு போனவளே..." - குடும்ப தொடர்....
படிக்க தவறாதீர்கள்...
வாடா நல்லவனே நீ என்ன அதிசயமா சீக்கிரமே எழுந்துட்ட -பரணி..
போன் வந்துதுடா திரும்ப படுத்தா தூக்கம் வரல..அதான்..
ஓ. சரி,அப்போ நா கிளம்புறேன்டா..
சரி மச்சான் அப்போ மகிய நீயே ட்ராப் பண்ணிடுடா ஹாஸ்டல்ல..இனி அவள தனியா விடுறது ஸ்சேவ் இல்ல..
ஆமா ராம்..சரி நா பாத்துக்குறேன்..என பேசிக் கொண்டே கீழே சென்றனர்..
அங்கே மகியும் கிளம்புவதற்கு ரெடியாக இருந்தாள்..வா மகி நானே உன்ன ட்ராப் பண்ணிட்றேன்..-பரணி
சரிண்ணா என்றவள் கண்ணால் தன்னவனிடம் விடைபெற்று மற்றவர்களிடம் கூறிவிட்டு கிளம்பினாள்..வெளியில் வந்தவுடன் பரணி மகியிடம் இனி மேக்ஸிமம் தனியா வெளிய போறத அவ்வாய்ட் பண்ணிக்கோ மகிம்மா..எங்க ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் உன்கூட இருப்போம் ஓ.கே வா..
ஹம்ம் சரி அண்ணா,..
அவளை இறக்கிவிட்டு உள்ளே செல்லும் வரை பொறுத்திருந்து பார்த்துவிட்டு கிளம்பினான்..
அங்கு ராமோ அவர்களை அனுப்பிவிட்டு தன் அறைக்கு வந்தவனின் எண்ணம் பத்து மாதங்களுக்கு முன்னால் டெல்லியில் நடந்ததை சுற்றி வந்தது..
ACPயிடம் விடைபெற்று வந்த அடுத்த நொடி அவர்கள் சென்ற இடம் எஸ்.எம் ஹாஸ்பிட்டல்,.சிட்டியிலிருந்து சற்று தொலைவில் அமைந்திருந்தாலும் கூட்டத்திற்ககு என்னவோ குறைவில்லை என்றுதான் தோன்றியது இருவருக்கும்..மருத்துவமனை மட்டுமில்லாது அங்கேயே இயங்கிவரும் கல்லூரி வேறு....ஓங்கி உயர்ந்திருந்த கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கட்டிடங்களே பறைசாற்றின அதன் மதிப்பையும் அவற்றின் சொந்தகாரரின் மதிப்பையும்..எனவே அவர்களின் சந்தேகப் பட்டியலில் முதலிடம் பிடித்தவர் அந்த கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வர் அமர்நாத்…
ஜென்ரல் அவுட் பேஷன்ட்டாக உள்ளே நுழைந்தனர்..உள்ளே செல்ல செல்ல அவர்களுக்கு புரிந்தது எத்தனை பெரிய இடத்தில் கை வைக்கிறோம் என்று..ஒவ்வொரு மூலையிலும் பிரம்மாண்டம் தெரிந்தது..மருத்துவமனை என்ற நினைவே மறந்துவிடும் போலிருந்தது..ஸ்டோமக் அப்ஸெட் என்று கூறி டாக்டரை பார்க்க அமர்ந்திருந்தனர்..உள்ளே நுழைந்ததும் வழக்கமான பரிசோதனையை முடித்துவிட்டு ஏதோ எடுப்பதற்காக நர்ஸை தேடியவர்….”பாயல்”என்று குரல் கொடுத்தார்,ஒரு நிமிடம் இருவருக்கும் அதிர்ச்சி வருபவரை எதிர்பார்த்து காத்திருந்தனர்..ஒரு பெண் உள்ளே நுழைந்து சாரி டாக்டர் பாயல் வேலையை விட்டு போய்ட்டாங்க..நீங்க லீவ்ல இருந்ததால…….
ஓ..ஓ.கே.. இந்த ஹாஸ்பிட்டல்க்கு யார் எப்போ வரா போறாநு ஒன்னும் தெரியரதில்ல..சரி நீ போம்மா…
ஆக இங்கு நடப்பது அனைத்துமே யாருக்கும் சந்தேகம் வராதா வண்ணம் இயல்பாகவே நடக்கிறது என்பது உறுதி..டாக்டர் அறையைவிட்டு வெளியே வந்தவர்கள் உள்ளே வந்த பெண்ணைத் தேடி சென்றனர்..சற்று தொலைவில் அவள் இருப்பதை கண்டு அவளை நோக்கிச் சென்றனர்..
ஹலோ சிஸ்டர் ஒரு சின்ன ஹெல்ப்…
யெஸ் சொல்லுங்க..
நீங்க இப்போ உள்ள பாயல்நு ஒருத்தங்களைப்பத்தி…
ஆமா இங்க நர்ஸ்ஸா வேலை பாத்தாங்க..அவங்களுக்கென்ன??
இல்ல அவங்க போட்டோ எதாவது கிடைக்குமா?
இவர்களை சந்தேகப் பார்வை பார்த்தாள்,
இல்ல இவனோட கேள் ப்ரெண்ட் நேம் பாயல்..அவங்களும் இங்கதான் வேலை பாத்தாங்க..ஒரு சின்ன மிஸ் அண்ட்டெர்ஸ்டான்டிங்ல இவன்ட்ட சொல்லாம கோவிச்சுட்டு போய்ட்டாங்க..எவ்ளவோ ட்ரை பண்ணிணோம் கிடைக்கவேயில்லை..இவன் அவங்க நினைப்புலையே நொந்துட்டு இருக்கான்..அதான் ஒரு வேளை உங்ககிட்ட எதாவது தகவல் கிடைக்குமாநு..இதோ பாருங்க அவங்க நம்பர் கூட இருக்கு அவங்கதானானு மட்டும் கன்பார்ம் பண்ணிணா கூட போதும்..சாரி தப்பா எடுத்துகாதீங்க..-ராம்
பரணியோ மலங்க மலங்க விழித்தான்..டேய் எந்த பொண்ணையும் ஏறெடுத்து பாத்ததில்லடா நா..நீ பாட்டுக்கு அடிச்சு விடுறியேடா..