அவனால் நிற்கவே முடியவில்லை. எங்கே பேசி முடிப்பதற்குள் கீழே விழுந்துவிடுவோமோ என்ற பயத்துடனே அவசரமாக பேசிவிட்டு இறங்கிவிட்டான். அவனுக்கு சிந்தனாவின் இயல்பான பேச்சு ஆச்சர்யமாகதானே இருக்கும்.
அன்றைய நிகழ்வுக்குப் பிறகு சிந்தனா அவனுடன் பேச முற்படவில்லை. அவனை நேரில் பார்த்தாலும் அறியாத அந்நியர்கள் வந்தால் எப்படி எந்த சலனமும் இல்லாமல் இருப்போமோ அந்த மாதிரிதான் நடந்துகொண்டாள்.
அவனுக்கு ஆரம்பத்தில் உறுத்தல் இருந்தது. அவளிடம் தவறு இல்லை என்ற நினைவில் உண்டான உறுத்தல். அவள் ஒதுங்கிப் போனதால் அதன் பிறகு அவனும் கண்டு கொள்ளவில்லை. ஒரு பொண்ணுக்கே இவ்வளவு இருந்தால் எனக்கு எவ்வளவு இருக்கும்? என்று தனக்குத்தானே சப்பைக்கட்டு கட்டிக்கொண்டான்.
... ு சென்று படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்து வளர்த்தார். இப்போது சிந்தனா படிக்கும் கல்லூரியிலேயே அவன் படிக்க வந்ததற்கும் மறைமுகமாக அவரே காரணம். பேரன் செய்த முட்டாள்தனத்தினால் அன்பரசியின் முன்பு தோத்துப் போவோமோ என்றிருந்தது.
அந்த கோபத்தில் அவனை முட்டாள் என்று திட்டிவிட்டார்.
This story is now available on Chillzee KiMo.
...