கொஞ்ச நேரம் காத்திருந்தும் நிகேதன் வரவில்லை... சரி ஆபத்துக்கு பாவமில்லை என்று அதையே சாப்பிடலாம் என்று கேண்டினுக்கு போனால் மழையாகவா இருக்கவே வெளி சாப்பாடு சாப்பிட்றவங்கெல்லாம் இங்கேயே சாப்டாங்க மேடம்... எல்லாம் தீர்ந்து போச்சு.. என்றார் அவர்... சரி என்று ஒரு டீ வாங்கி குடித்தாள்... அது இன்னும் பசியை தான் கிளப்பிவிட்டது... முதல் நாள் அலுவலகம் வந்ததாலும்... வந்ததுமே விஜி செய்த பில்டப்பாலும் யாரும் நடபாக இல்லை... இனி தான் எல்லோரோடும் நட்பாக முயற்சிக்க வேண்டும்... தெரிந்த ஒருத்தியான விஜியும் மதியமே கிளம்பிவிட்டாள்...
அதனால் என்ன செய்வதென்று தெரியாமல் உட்கார்ந்திருந்தாள்... எப்படியும் நிக்கி வந்துவிடுவான் என்ற நம்பிக்கை இருந்தது இவளுக்கு... ஆனால் இவள் இவ்வளவு
...
This story is now available on Chillzee KiMo.
...
ுந்த இவன் பி.ஏ வை கூப்பிட்டு... " ஏன் மிஸ். நீரஜா இன்னும் கிளம்பலைன்னு கேளுங்க...." என்று அவளை அனுப்பினான்.
நிகேதன் சாரோட தங்கை தானே... ஏன் இவரே பேசாமல் தன்னை அனுப்புகிறார் என்ற யோசனையோடு... நீரஜாவிடம் சென்றாள் அந்த பி.ஏ...
"மேடம் நீங்க இன்னும் கிளம்பலையா.." என்று அவள் கேட்க..