"விருப்பமில்லைன்னா சரி!"
"................"-சிறிது நேரம் கழித்து அவள் தொடர்ந்தாள்.
"நான் அப்போ சின்ன பொண்ணு தான்!அப்பா இறந்ததுக்கு அப்பறம்,அண்ணா கம்பெனி பொறுப்பு எல்லாத்தையும் தன் மேலே போட்டுக்கிட்டார்.உங்களுக்கு முன்னாடியே அவருக்கு மூணு பேர் நல்லா க்ளோஸா இருந்தாங்க!"
"யாரு?"
"கார்த்திக்,மனோ,அசோக்!"-திவாகரின் புருவம் சுருங்கியது.
"அவர்களில் அசோக்னா அண்ணனுக்கு உயிர்!ஃப்ரண்டஸ்னா அவங்க மாதிரி யாராலும் முடியாதுன்னு ஊரே பொறாமைப்படும்!அவருக்கும் யாரும் கிடையாது!சின்ன வயசுல இருந்தே கஷ்டப்பட்டு முன்னேறினவர்!அவர் தான் என்னை மதின்னு கூப்பிடுவார்!"
"................"
"எல்லாம் நல்லப்படியா போயிட்டு இருந்தது.திடீர்னு ஒரு 4 வருஷத்துக்கு முன்னாடி அண்ணாவோட கம்பெனில பெரிய ஷேரை எடுத்துட்டு அவங்க மூணு பேரும் எங்கேயோ போயிட்டாங்க!"
"ம்.."
"நான் எந்த அளவு அவங்க மேலே மரியாதை வச்சேனோ!எல்லாமே தரைமட்டமாயிடுச்சி!அதனால,ப்ளீஸ் பழைய விஷயத்தை எல்லாம் ஞாபகப்படுத்துற மாதிரி என்னை மதின்னு கூப்பிடாதீங்க!"-திவாகர் ஒரு பெருமூச்சைவிட்டான்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
தேவியின் "பாயும் மழை நீயே" - காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்...
"இப்போ அவங்க எங்கே இருக்காங்கன்னு தெரியுமா?"
"தெரியாது..!"
"சரி..நான் இனி உன்னை மதின்னு கூப்பிடலை!போதுமா?"
"என் மேலே கோபம் இல்லையே!"
"இல்லைடா!உன் மேலே நான் ஏன் கோபப்பட போறேன்!"
"தேங்க்ஸ்!"
"அதெல்லாம் வேணாம்!எனக்கு சூடா ஒரு கப் காபி போட்டு தாயேன்!"
"இதோ 2 நிமிஷம்!"-என்று அவள் உள்ளே சென்றாள்.
அவள் சென்றதும் திவாகரின் முகம் எதையோ சிந்திக்க ஆரம்பித்தது.
"சிவன்யாம்மா!"
"என்ன லட்சுமி?"
"உங்கக்கிட்ட கொஞ்சம் பேசணும்!"
"சொல்லு!"
"அது...திவாகர் ஐயாக்கிட்ட உங்களுக்கு ஏதாவது வித்தியாசம் தெரியுதா?"
"இல்லையே..!ஏன்?"
"அவர் முன்பை மாதிரி இல்லைம்மா!"
"என்ன உளர்ற நீ?"
"தப்பா நினைக்காதீங்கம்மா!"-திவாகரிடம் தான் கண்ட அனைத்து விசித்ரங்களையும் கூறி முடித்தாள் லட்சுமி.
"சந்தேகமா இருந்தா நீங்களே கவனிச்சு பாருங்க!"-சிவன்யாவின் மனம் திடுக்கிட்டது.
அவள் சற்றும் எதிர்ப்பார்த்திருக்க மாட்டாள்,இனி அவள் வாழ்வில் நடக்கவிருக்கும் மாற்றத்தை...!!!
தொடரும்
{kunena_discuss:991}