“ஓம் த்ரயம்பகம் யஜமஹி
சுகந்திம் புஷ்டி வர்தனம்
உர்வருகமிவ பந்தனாத்
ம்ருத்யோர் முக்ஷிய மம்ருடட்”
எத்தனை தடவை அந்த மந்திரத்தை சொல்லிக்கொண்டிருந்தாளோ தெரியாது…
சில மணி நேரங்களுக்குப் பிறகு, மருத்துவர் முகம் எங்கும் நிறைவுடன் வந்து, பிரம்மிரிஷியிடமும், இஷானிடமும், பேசிவிட்டு இரண்டடி எடுத்து வைத்தவர்,
இன்னமும் கை கூப்பி வேண்டிக்கொண்டிருப்பவளை பார்த்து, தன் நெஞ்சில் கைவைத்து மேலே பார்த்து ஒரு கணம் விழி மூடியிருந்துவிட்டு அங்கிருந்து அகன்றார்…
“அந்த சிவபெருமானோட ம்ருத்யுஞ்ஜெய மந்திரம், உன்னோட சிவ ம்ருத்யுஞ்ஜெயனை காப்பாத்திட்டு சதி… கண்ணைத்திறந்து பார்…” என்றதும், மெல்ல விழி திறந்தவளின் பார்வையில் கோடி கோடியாய் நன்றியுணர்வு தெரிய, அதை சிறு கண் அசைப்போடு பெற்றுக்கொண்டார் பிரம்மரிஷி நிறைவான புன்னகையுடன்…
சட்டென எழுந்து ஜெய் இருக்கும் அறையை நோக்கி ஓடினாள் சதி மனம் எங்கும் நிறைந்த சந்தோஷத்துடன்…
{kunena_discuss:1001}