அவள் பயந்து வந்த மாதிரி மாமனார் அவர்களை எதுவும் செய்யவிடாமல் அன்பரசி தடுத்துவிட்டாள்.
அவள் யாரை நினைத்து பயந்தாளோ அவர்கள் அவளை எதுவும் சொல்லவில்லை. யாரை நம்பி வந்தாளோ அவனது நடத்தையில் நொந்துபோனாள்.
“ஏன்டி? திடீர் கல்யாணம்கிறதால் அன்னிக்கு நமக்கு தேவையானதை செய்ய முடியலை. இப்ப நம்ம கல்யாணம் முடிஞ்சு எத்தனை நாளாயிடுச்சு? உங்கம்மா எனக்கு செய்ய வேண்டியதை இன்னும்ஏன் செய்யலை?”
அவள் திகைத்து கணவனை நோக்கினாள்.
“என்ன செய்யனும்?” தடுமாறியவாறே கேட்டாள்.
“என்ன செய்யனுமா? சும்மா உன்னை ஓட்டி விட்டுட்டோம்னு சந்தோசமா இருக்காங்களா உங்க வீட்டில். கல்யாணமான பொண்ணு புகுந்த வீட்டில் சந்தோசமா வாழனும்னு அவங்களுக்கு ஆசையே இல்லையா?”
கோபத்து
...
This story is now available on Chillzee KiMo.
...
சரி” என்றாள்.
அப்போது கதவை தட்டும் சத்தம் கேட்டு திறந்து வெளியில் பார்த்தாள். அங்கே அன்பரசி நின்றிருந்தாள்.
“அண்ணி. நீ கொஞ்சம் என்னோட வா!”
அவளும் உடன் சென்றாள்.
ஒரு புது பட்டுப்புடவையை அவளுக்கு எடுத்து கட்டிவிட்டவள் அதற்கு பொருத்தமாய் நகைகளையும் மாட்டிவிட்டாள்.