(Reading time: 8 - 16 minutes)

"ன்னடா பண்ண அவளை?"

"கொன்னுட்டேன்!"-அதிர்ந்துப்போனான் அவன்.

மகேஷை தள்ளிவிட்டு மேல் அறைக்கு ஓடினான்.

"மதி!"-பதற்றமாக கதவை திறந்தவனின் கண்களுக்கு யாரும் தெரியவில்லை.

"மதி!"-உள்ளே சென்று தேடினான்.

"மதி!எங்கேம்மா இருக்க?"-அவன் தேடிக் கொண்டிருக்க,அவனது முதுகில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது.அதிர்ச்சியாக திரும்பினான் அவன்,கையில் துப்பாக்கியை பிடித்தப்படி மகேஷ் நின்றிருந்தான்.

"மகேஷ்!"

"வாடா!இத்தனை வருஷமா தங்க முட்டையிடுற வாத்தை நாங்க பார்த்து பார்த்து வளர்ப்போமாம்!இவர் வந்து அதை தூக்கிட்டு போயிடுவாராம்!எங்கப்பா இருக்காரே!உன் மதிக்கு 25 வயசு ஆகுற வரைக்கும் அவளால சொத்தை யார் பெயரிலும் மாற்ற முடியாதுன்னு எழுதிட்டு போயிட்டார்!இது தெரியாம நான் உன்கிட்ட உண்மையை உளரிட்டேன்.நீ வந்து அவ மனசை கலைத்து,அவளைகல்யாணம் பண்ணி கூட்டிட்டுப் போயிட்டா?நான் என்ன செய்றது?ஸாரிடா!எனக்கு பணம் தான் முக்கியம்!"-என்று அவன் நெஞ்சில் சுட்டான் மகேஷ்.

அச்சமயம்,

ஏதோ பேசியப்படி அங்கு வந்த மனோவும்,கார்த்திக்கும் அங்கு நடந்த கொடூரத்தை கண்டு திடுக்கிட்டனர்.

"டேய்!"-மனோ,மகேஷை பிடித்துக் கொள்ள,கார்த்திக் அசோக்கிடம் ஓடினான்.

"அசோக்!"-அதற்குள் மனோவை தள்ளியவன்,அவன் மார்பிலும் சுட்டான்.

"மகேஷ்!"

"உங்களை யார் இங்கே வர சொன்னது?வந்தீங்கல்ல!உங்க நண்பன் கூட சேர்ந்து நீங்களும் சாவுங்க!"-என்று கார்த்திக்கையும் சுட்டான் அவன்.மூவரின் உயிர் பிரியும் தருவாயில்,அசோக்கின் பார்வை அவனையே தஞ்சம் அடைந்திருந்தது.

"ரித்திக்!"-மகேஷ் அழைக்க,ஓடி வந்தான் ஒருவன்.

"பங்களா பின்னாடி இருக்கிற,ஆலமரத்துல தூக்குல இவனுங்களை தொங்க விடு!ஷேரை ஏமாற்ற பார்த்தாங்க!அதை கண்டுப்பிடித்தால,அவமானம் தாங்காம தற்கொலை பண்ணிட்டாங்கன்னு கதையை கட்டு!"

"எஸ் சார்!"-மகேஷ் துப்பாக்கி அவனிடம் தந்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

டிந்துப்போய் அமர்ந்திருந்தாள் சிவன்யா.

"உன்னை காதலித்ததை தவிர,எந்த பாவத்தையும் அசோக் பண்ணலை!எந்த தப்பும் செய்யாத எங்ளை கொன்னு,எங்க மேலே பழி சுமத்தி,எங்களோட குடும்பமே எங்களை பழிக்கிற மாதிரி செய்தவன் உன் அண்ணன்!"

"..............."

"உன்னை பயமுறுத்தினது எல்லாம் நான்!இதுக்கு காரணமான உன்னையும் கொல்ல துடித்தது நான்!என்கிட்ட ஒவ்வொரு முறையும் உன்னை பாதுகாத்தவன் அசோக்!"-அவள் சிலையாக நிமிர்ந்துப் பார்த்தாள்.

"அவனுக்கு வேண்டியதெல்லாம் உன் உடலாக இருந்திருந்தா,அவனுக்கு உன்னை கட்டாயப்படுத்த ரொம்ப நேரம் ஆகி இருக்காது!அவன் உயிரையும் விட்டிருக்க மாட்டான்.அவனுக்கு தேவைப்பட்டது உன் காதல்!நீ அதை கேவலப்படுத்துற!"

"..............."

"உங்கண்ணனுக்கு முடிவு வந்தாச்சு!எவ்ன் மன்னித்தாலும் நான் அவனை மன்னிக்க மாட்டேன்!உனக்கு எதுவும் தெரியாத பாவத்தால,நீ பிழைத்துப் போ!உங்கண்ணனோட கோரமரணத்தை பார்க்காம இருக்க ஆசைப்பட்டா,இந்த வீட்டை விட்டு போயிடு!திவாகருக்கு எதுவும் ஆகாது!எங்க வேலை முடிந்ததும் அவன் உன்னை வந்து சேருவான்!"-திவாகர் ரூபத்தில் இருந்த கார்த்திக் எச்சரிக்கை செய்துவிட்டு நகர்ந்தான்.

தொடரும்

Episode 07

Episode 09

{kunena_discuss:991}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.