(Reading time: 13 - 25 minutes)

துளசியின் செக்-லிஸ்ட் உதவியுடன் அழகாக கட்டிய சேலை, தழைய பின்னிய கூந்தல், அழகிய மல்லிகை மலர் சரம் என கோவிலுக்கு ஏற்ற அலங்காரத்துடன் ரேவதியுடன் கோவிலுக்கு சென்றாள் நந்திதா.

அவ்வளவாக கோவிலுக்கு சென்று பழக்கமில்லாதவள் என்பதால், ரேவதி செய்வதை எல்லாம் அப்படியே செய்தாள்...

அம்மன் சந்நிதானத்தில் தரிசனம் முடித்து திரும்பிய போது, அவளை அழைத்த ரேவதி,

“கல்யாணம் ஆன பொண்ணு குங்குமத்தை தலை வகிட்டுலயும் வைக்கனும்..” என்றாள்.

நந்திதா அதை செய்ய,

“இதெல்லாம் கூட நான் சொல்லி தெரிய வேண்டி இருக்கு....” என்று நந்திதாவிற்க்கு தெளிவாக கேட்கும் வண்ணம் முணுமுணுத்து விட்டு நடந்தாள் ரேவதி.

ரேவதியின் முனுமுனுப்பு காதில் விழுந்த போதும் நந்திதா அதை

...
This story is now available on Chillzee KiMo.
...

நந்திதாவின் அமைதியான பேச்சு சந்தோஷை ஆச்சர்யப் படுத்தி இருக்க வேண்டும்.... அவன் உடனே எந்த பதிலும் சொல்லவில்லை...

இதுவரை அமைதியாக நின்றிருந்த ப்ரியா இப்பொழுது பேசினாள்...

“இல்லை... நான் லைப்ரரில எடுத்த புக் ஒன்னு கடன் வாங்கி இருந்தார்... அதை கொடுத்துட்டு போக வந்திருக்கார்...”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.