வீட்டிற்கு வந்த பின்பும் கூட நீரஜா கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தாள்... வீட்டிற்கு வரும் வரையிலும் சஞ்சய் இவளோடு எத்தனையோ முறை அலைபேசியில் பேச முயற்சித்தான்... ஆனால் இவள் அவன் அழைப்பை ஏற்கவில்லை... இந்த நேரத்துல எங்கப் போயிட்டு வர நிரு... என்று தன் அண்ணன் கேட்டதுக்கு கூட இவள் பதில் ஏதும் பேசவில்லை...
தன் அறைக்கு வந்த பின்பு, மந்த்ரா பேசியது தான் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது... "தப்பு செய்ய வாய்ப்பு இல்லாத வரைக்கும் ஆண்கள் நல்லவங்களா தான் இருப்பாங்க..." அப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சா, அதை அவங்க யூஸ் பண்ணிக்க பார்ப்பாங்க..." என்று அவள் சொன்னபோது சஞ்சய் அதற்கு விதிவிலக்கானவன் என்று நினைத்தாள்... ஆனால் இன்று..??
அந்த மந்த்ராவிடம் எப்படி நடந்துக்
...
This story is now available on Chillzee KiMo.
...
ல் தோன்றியதில்லை... நீரஜா, நிகேதனிடம் இதைப்பற்றி பேசவேண்டாம் என்று கூறிவிட்டான்...
சஞ்சயின் திருமணத்தை பொறுத்தவரை அது அவனது விருப்பப்படி தான் நடக்க வேண்டும், நாம் அவனை கட்டாயப்படுத்தக் கூடாது என்று சஞ்சயின் அப்பா அடிக்கடி அம்பிகாவிடம் சொல்வார்... அதனால் அம்பிகாவும் அமைதியாகிவிட்டார்..