கருத்துக் கதைகள் – 27. பிம்பம் - Chillzee Team
ஒரு சிறுவனும் அவனுடைய தந்தையும் ஒரு மலையடிவாரத்தில் நடந்துக் கொண்டிருந்தார்கள். அப்போது கால் தடுக்கி அந்த சிறுவனுக்கு காலில் காயம் ஏற்பட்டது. வலி தாங்காமல், “ஐயோ” என அலறினான் அவன்.
அப்போது இன்னுமொரு குரலும் “ஐயோ” என்று அலறியது.
இது யாரடா என்ற கேள்வியுடன், “யார் நீ?” என்றுக் கேட்டான் அந்த சிறுவன்.
மீண்டும் அதே குரல், “யார் நீ?” என்றது.
“ஹேய் லூசு” என்றான் சிறுவன்.
அந்த குரலும் “ஹேய் லூசு” என்றது.
“யாருப்பா இது? என்ன நடக்குது இங்கே?” என தன் தந்தையிடம் கேட்டான் அவன்.
“இதை எதிரொலின்னு சொல்வாங்க குட்டிப்பா. இதை கவனி....” என்ற அவன் தந்தை,
“நான் நல்லவன்....” என்று கத்தினார்.
அது மீண்டும் எதிரொலித்தது.
“இந்த எதிரொலி போலவே தான் வாழ்க்கையும். நீ என்ன சொல்றீயோ, கொடுக்குறீயோ அதை உனக்கு திருப்பிக் கொடுக்கும். நம் வாழ்க்கை நம்முடைய பிரதிபலிப்பு தான். உனக்கு நிறைய அன்பு வேணும்னா, உன் மனசு முழுக்க அன்பை நிறப்பு. எல்லோருக்கும் நல்லதையே நினை, உனக்கும் நல்லது நடக்கும்...”
நம் வாழ்க்கை நம்முடைய கண்ணாடி பிம்பம் போல தான்... நாம் செய்வதை நமக்கு திருப்பிக் கொடுக்கும்.