(Reading time: 8 - 16 minutes)

என்ன பரிசு தருவீர்கள்? என்று கேட்டான், அறிவாளன்.

  

'' அய்யா அறிவாளரே, நீங்கள் இந்தத் திருடனைக் கண்டு பிடித்துக் கொடுத்தால் உங்களுக்கு நீங்கள் குத்தகைக்கு உழும் நிலம் அத்தனையும் சொந்தமாக்கிப் பட்டா எழுதிக் கொடுக்கிறேன்" என்றான் பூவேந்தன்.

  

"மிக்க நன்றி அரசே! மிக்க நன்றி. உங்கள் அரண்மனை வேலையாட்கள் அனைவரையும் வரச் சொல்லுங்கள். எனக்கு ஓர் அறை ஒதுக்கிக் கொடுங்கள். அந்த அறையின் மத்தியில் நான் கொண்டுவந்திருக்கும் இந்த மந்திர இருப்புச் சட்டியைத் தலை கீழாக வைப்பேன். ஒவ்வொருவரும் இருப்புச்சட்டியின் மீது தம் உங்ளங்கையை வைத்து அழுத்த வேண்டும். நல்லவர்கள் கைப்படும்போது இருப்புச்சட்டி அசையாது. திருடியவர் கை பட்டவுடன் கூச்சலிட்டுக்கொண்டு குதித்தெழுந்து நிமிர்ந்துவிடும். இந்த மந்திர இருப்புச் சட்டியை இமயமலையிலிருந்து வந்த ஒரு தவ முனிவர் என்னிடம் கொடுத்துச் சென்றார். இதன் மூலம் நான் முப்பது திருட்டுக் களைக் கண்டு பிடித்திருக்கிறேன் என்று சொன் னான். அறிவாளன் சொன்ன இந்தச் செய்தி அரண் மனை முழுவதும் பரவிவிட்டது.

  

அரண்மனையில் வேலை பார்த்த வேலை யாட்கள் அறுபது பேரும் அறைவாசலில் வரிசையாக நிறுத்தப்பட்டார்கள். அறையின் மத்தியில் ஒரு மேசையின் மீது இருப்புச் சட்டி தலைகுப்புறக் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தது. அறைச் சன்னல்கள் அனைத்தும் மூடி இருட்டாக்கப்பட்டது. கதவு திறக்கும் போது மட்டுமே உள்ளே மங்கலான வெளிச்சம் தெரிந்தது.

  

வேலைக்காரர்கள் ஒவ்வொருவராக அறைக்குள் சென்று வந்தார்கள்.

  

இருப்புச் சட்டி போடப் போகும் கூச்சலை எதிர் பார்த்துக்கொண்டு எல்லோரும் ஆவலோடு காத்திருந் தார்கள்.

  

ஒவ்வொருவராக அறைக்குள் போய் உள்ளங் கையால் இருப்புச் சட்டியைத் தொட்டுவிட்டுத் திரும்பி வந்தார்கள். இப்படி அறுபது பேரும் போய் வந்துவிட்டார்கள். இருப்புச் சட்டி கூச்சல் போடவும் இல்லை. எழுந்து குதிக்கவும் இல்லை. நிமிர்ந்து நிற்கவும் இல்லை.

  

அரசன் பூவேந்தனுக்குக் கோபம் கோபமாக வந்தது. அறிவாளன் என்ற இந்தக் குடியானவன்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.