புரட்டுக்காரன் என்று முடிவு செய்தான்.
"மாயமாவது மந்திரமாவது? எல்லாம் பித்தலாட்டம்'' என்று கூச்சலிட்டான்.
அறிவாளன் , அரசன் எதிரில் வந்தான்.
"அவசரப்படாதீர்கள் அரசே! இதோ ஒரு நொடி யில் திருடன் அகப்படப்போகிறான். பாருங்கள்!'' என்றான்.
அறுபது வேலையாட்களையும் மீண்டும் வரிசை யாக நிற்கச் சொன்னான்.
"எல்லோரும் இருப்புச் சட்டியைத் தொட்டீர்கள் அல்லவா? கையை நீட்டுங்கள்'' என்றான்.
எல்லோரும் கையை நீட்டினார்கள். அறிவாளன் ஒவ்வொருவர் கையாகப் பார்த்துக் கொண்டு வந்தான்.
வரிசையில் நின்ற ஒருவரைப் பிடித்து இழுத் தான். அரசர் முன் கொண்டுவந்து நிறுத்தினான்.
''அரசே! இவர் இருப்புச் சட்டியைத் தொடா மலே வந்திருக்கிறார். அதனால் தான் இருப்புச்சட்டி குதிக்கவில்லை; கூச்சல் போடவில்லை'' என்றான்.
"இந்தக் குடியானவன் பொய் சொல்கிறான். நான் தொட்டேன்'' என்றான் அந்த ஆள்.
'சரி , மறுபடி தொடு பார்க்கலாம்'' என்றான் அறிவாளன்.
அவன் தயங்கினான். பிறகு உண்மையை ஒப்புக் கொண்டான்.
அரசன் பூவேந்தனுக்கு இருப்புச் சட்டி குதிப்ப தைப் பார்த்துவிட வேண்டும் என்று தோன்றியது.
திருடியதாக ஒப்புக் கொண்ட ஆளை இருப்புச் சட்டியைப் போய்த் தொடும்படி ஆணையிட்டான்.