அதிசய உலகம் - 05. இரண்டு மாடி ஏறி வந்த முதலை! - தேன்மொழி
மனிதர்கள் விலங்குகளின் இடங்களை ஆக்கிரமிப்பதால் அவ்வப்போது அவற்றுக்கும் மனிதர்களுக்கும் இடையே எதிர்பாராத சந்திப்புகள் நிகழ்வது நாம் கேள்வி படுவது தான்.
இதில் முதலைகளும் விதி விலக்கு அல்ல!
வீட்டின் வாசலில் முதலை இருந்ததாக சொல்லும் செய்திகள் அவ்வப்போது நாம் கேள்வி படுவதே!
ஆனால் சமீபத்தில் சிறிய குளத்தின் அருகே அமைந்துள்ள ஒரு வீட்டின் இரண்டாம் மாடி தாழ்வாரத்தில் அழையா விருந்தாளி ஒருவர் வந்திருந்தார்.!
அவர் வேறு யாருமில்லை கிட்டத்தட்ட பத்து அடி நீளமான முதலையார் தான்!
நள்ளிரவில் கேட்ட சத்தத்தை வைத்து யாரோ திருடன் வந்திருப்பதாக முதலில் நினைத்த அந்த வீட்டில் வசிக்கும் குடும்பம், போலீசை அழைத்து விட்டு வெளியே எட்டி பார்த்து திகைத்து போய் விட்டனர்.
போலீஸ் வரும் வரை முதலை கதவை உடைத்து வந்து விடாமல் இருக்க சோபா, நாற்காலிகள் அனைத்தையும் கதவில் வைத்து தடுப்பு அமைத்து வைத்தார்களாம்.
முதலை இரண்டு மாடி ஏறி வருவதாக கேள்வி படுவது இதுவே முதல் முறை என்கிறார்கள்.
மனிதர்களை போல விலங்குகளும் புதிய இடங்களை கண்டுபிடித்து ஆக்ரமிக்க கிளம்பி விட்டனவோ என்னவோ!
{kunena_discuss:1125}