அதிசய உலகம் - 14. காதலை வாழ வைக்கும் கல்லான காதல் ஜோடி - தேன்மொழி
சிவங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இருக்கும் வேலூரில் இருக்கும் தரிசுப் பகுதியில் இரண்டு கல்தூண் பாறைகள் உள்ளன.
இவை கல் தூண் அல்ல காதலர்களின் தெய்வம் என்கிறார்கள் சிலர்.
இங்கு வந்து இந்த இடத்தை மிதித்து சென்றாலே காதல் நிறைவேறி விடும் என்ற நம்பிக்கை பல காதலர்கள் மத்தியில் பலமாக உள்ளது.
யார் இந்த காதலர் தெய்வங்கள்?
இந்த காதலர் தெய்வங்களை பற்றி சொல்லப்படும் செவி வழி கதை:
இப்போது கல்லாக காட்சி தரும் இவை இரண்டும் ஒரு காலத்தில் காதலர்களாக இருந்த ஆண் - பெண் ஜோடி.
ஆடு மேய்க்கும் போது உருவான இவர்களின் காதல் ஊர்மக்களின் தடையினால் பிரிந்தது.
அந்த பிரிவை தாங்க முடியாமல் இருவரும் தங்களை தாங்களே கல்லாக்கி கொண்டு காலம் காலமாக காதலை வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
இங்கே இவர்களை வணங்கி விட்டு சென்றால் எந்த பிரச்சனையையும் தாண்டி காதல் நிறைவேறும்.
காதலர் தினமான் பிப்ரவரி 14ல் ஜோடியாக பல காதலர்கள் இங்கே அவனது இந்த கள் தூண்களை வணங்கி செல்வது வழக்கமாகி விட்டதாக அந்த பக்க மக்கள் சொல்கிறார்கள்!
மானாமதுரை செல்லும் வாய்ப்பு கிடைத்தால், மறக்காமல் இந்த நம்ம ஊர் தாஜ்மஹாலையும் பார்த்து வாருங்கள்!
{kunena_discuss:1125}