சினிமா சுவாரசியங்கள் - காதல் கசக்குதையா
சினிமாத் துறை சம்பந்தப் பட்ட திருமணங்கள் அனைத்துமே பெரும்பாலும் ஏதாவது ஒரு காரணத்திற்காக பேசப் படும் விழாக்கள் ஆக இருக்கின்றன.
அப்படி 1991ல் நடந்த ஒரு திருமணம் ஹிந்தி சினிமா துறையை சேர்ந்த அம்ரிதா சிங் – சாயப் அலி கான் திருமணம்.
அம்ரிதா சிங் புகழ்ப் பெற்ற ஹிந்தி நடிகை, சாயப் கிரிக்கெட் வீரர் பட்டோடி – நடிகை ஷர்மிளா தாகூரின் மகன் என்பதை தாண்டி இந்த திருமணம் பேசப் பட்டதற்கு இன்னொரு காரணமும் இருந்தது.
அது அம்ரிதாவிற்கும் சாயபிற்கும் நடுவே இருந்த வயது வித்தியாசம்.
இவர்களின் திருமணம் நடந்தப் போது அம்ரிதாவிற்கு வயது 33, சாயபிற்கு வயது 21.
சாயப் அலி கானை பொறுத்த வரைக்கும் இது லவ் அட் பர்ஸ்ட் சைட்!
ஒரு படப்பிடிப்பில் அம்ரிதா சிங்கை பார்த்த உடனே அவருக்கு பிடித்துப் போனது. காதலை அம்ரிதா சிங்கிடம் சொல்லி, அவரை சம்மதிக்க வைத்து 13 வருட வயது வித்தியாசத்தையும் தாண்டி இருவரும் திருமணம் செய்துக் கொண்டார்கள். சாரா, இப்ராஹீம் என இரண்டு குழந்தைகள் பிறந்து அவர்களுடைய திருமணம் எல்லோரும் ஆச்சர்யப்படும் அளவிற்கு சந்தோஷமானதாக இருந்தது.
பதிமூன்று வருடங்கள் ஓடி செல்ல என்றென்றும் காதல் என்று பேசப் பட்ட காதல் கசந்துப் போனது. 20௦4ல் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.
2012ல் சாயப் பிரபல ஹிந்தி நடிகை கரீனா கபூரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
அம்ரிதா உடனான விவாகரத்து பற்றி தன் குழந்தைகளிடம் பேச வேண்டி இருந்தது குறித்து சமீபத்தில் பேசிய சாயப் அது தான் உலகத்திலேயே மோசமான விஷயம் என்று குறிப்பிட்டு இருந்தார்.
அம்ரிதா சிங்கும், சாயப் அலி கானும் சந்திக்க காரணமாக இருந்த படப்பிடிப்பு சாயப்பின் அறிமுக படமாக இருந்திருக்க வேண்டியது. படப்பிடிப்பில் சாயப்பின் நடவடிக்கைகள் பிடிக்காமல் இயக்குனர் ராகுல் ராவெயில் படத்தின் ஹீரோவை மாற்றினார். இதை முதலிலேயே செய்திருந்தால் சாயப்பும் அம்ரிதாவும் சந்திக்காமலே கூட இருந்திருக்கலாம்!
அவர்கள் சந்திக்க வேண்டும், இப்படி நடக்க வேண்டும் என்பது விதி? இருக்கலாம், வேறு என்ன சொல்வது.