Chillzee சமையல் குறிப்புகள் - பன்னீர் குருமா
பன்னீர் குருமா செய்வதற்கு எளிதானது. சுவையோ அலாதியானது!
தேவையான பொருட்கள்
200 கிராம் பனீர்
2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
1/2 அங்குல இலவங்கப்பட்டை
1 டீஸ்பூன் சீரகம்
1 டீஸ்பூன் சோம்பு
6 பூண்டு பல்
1/2 அங்குல இஞ்சி
2 வெங்காயம்
10 முந்திரி
2 தக்காளி
2-3 பச்சை மிளகாய்
1 டீஸ்பூன் மிளகாய் தூள்
உப்பு – தேவைக்கு
1 டேபிள்ஸ்பூன் கொத்தமல்லி இலைகள்
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, அதில் பட்டை, சீரகம் மற்றும் சோம்பு சேர்க்கவும்.
பின், பூண்டு மற்றும் இஞ்சி சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.
பிறகு, நறுக்கிய வெங்காயம் மற்றும் முந்திரி பருப்பு சேர்க்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாய், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
தக்காளி நன்ராக வேகும் வரை வதக்கவும்.
ஸ்டவ்வில் இருந்து நீக்கி, ஆற வைத்து, மிக்ஸியில் போட்டு, ஒரு கப் தண்ணீர் சேர்த்து மைய்ய அரைத்துக் கொள்ளவும்.
கடாயை ஸ்டவ்வில் வைத்து, அரைத்த விழுது மற்றும் மேலும் ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும்.
அத்துடன் பனீர் துண்டுகளைச் சேர்க்கவும்.
பத்து நிமிடங்கள் நன்றாக கொதிக்க விடவும்.
கொத்தமல்லி இலைகளை தூவி சூடாகப் பரிமாறவும்.