Chillzee சமையல் குறிப்புகள் - பட்டாணி குருமா - ரஞ்சி
தேவையான பொருட்கள்
பச்சை பட்டாணி - அரை கப்
கேரட் - 1
பீன்ஸ் - 100 கிராம்
தேங்காய் துருவல் - அரை கப்
பச்சை மிளகாய் - 7
தக்காளி - 1
பெரிய வெங்காயம் - 1
கசகசா - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
தனியா - 3 டீஸ்பூன்
பட்டை - 2
கிராம்பு - ௪
மஞ்சள் தூள் - சிறிது
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - ஆறு பல்
கறுவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
- பட்டாணியை ஊற வைக்கவும்.
- வெங்காயம், தக்காளி, பீன்ஸ் மற்றும் கேரட்டை சிறிதாக நறுக்கி கொள்ளவும்.
- கிராம்பு மற்றும் பட்டையை சற்றே நசுக்கி வைக்கவும்.
- ஊற வைத்த பட்டாணி மற்றும் கேரட், பீன்ஸ் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்
- கடாயை அடுப்பில் வைத்து, பச்சை மிளகாய் மற்றும் தனியாவை லேசாக வருத்துக் கொள்ளவும்.
- அதே கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து பாதி வெங்காயம், இஞ்சி, பூண்டு அனைத்தையும் வதக்கி கொள்ளவும்.
- தேங்காய் துருவல். சோம்பு, வதக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி மற்றும் பச்சை மிளகாய், தனியா, கசகசா அனைத்தையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு, நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றவும்.
- எண்ணெய் சூடானதும் பட்டை மற்றும் கிராம்பை போடவும். பின் கறுவேப்பிலை, கொத்தமல்லியை போடவும்.
- நறுக்கி வைத்துள்ள பாதி வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கிய உடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
- தக்காளி வெந்து நன்றாக கலந்த உடன், அரைத்து வைத்திருக்கும் மசாலாவையும், உப்பையும் சேர்த்து கிளறவும்.
- குழம்பு கொதித்த உடன் வேக வைத்துள்ள பட்டாணி, கேரட், பீன்ஸ் சேர்க்கவும்.
- தேவைக்கு தண்ணீர் சேர்த்து, சிறிது நேரம் கொதிக்கவிட்டு, குருமா தேவையான பதத்தில் வந்த உடன் இறக்கவும்.
- சுவையான, ஆரோக்கியமான குருமா தயார்.
- இது சப்பாத்தி மற்றும் பூரிக்கு சரியான சைடிஷ்!