(Reading time: 2 - 3 minutes)

Chillzee சமையல் குறிப்புகள் - உப்பு கார உருண்டை

uppuKaaraUrundai

தேவையான பொருட்கள்

கடலைப் பருப்பு - அரை கப்

துவரம் பருப்பு - அரை கப்

பாசி பருப்பு - கால் கப்

காய்ந்த மிளகாய் - 2

புலி - நெல்லிக்காய் அளவு

கொத்தமல்லி தழை (சிறிதாக நறுக்கப் பட்டது) - 1 டேபிள் ஸ்பூன்

தேங்காய் துருவல் - ஒரு டேபிள் ஸ்பூன்

கறுவேப்பிலை - ஒரு டேபிள் ஸ்பூன்

வெல்லம் - 1 டேபிள் ஸ்பூன் (தேவை என்றால்) 

 

 

தாளிக்க 

கடுகு - 1/2 டீஸ்பூன்

எண்ணெய் - 3 ஸ்பூன்

 

செய்முறை

பருப்புகள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

ஊற வைத்த பருப்புகளுடன் மிளகாய், புளி, வெல்லம், உப்பு, தேங்காய் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த மாவை இட்லிப் பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேக வைத்து எடுங்கள்.

ஆறிய உடன் உதிர்த்து விடுங்கள்.

வேகவைத்த இந்த கலவையுடன் கடுகை தாளித்து சேருங்கள். சின்னதாக நறுக்கப்பட்ட கறுவேப்பிலை, கொத்தமல்லி தழை சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக அழுத்திப் பிடியுங்கள்.

உப்பு, புளிப்பு, காரம், இனிப்பு என பல் சுவைகள் சேர்ந்த சுவையான உருண்டை தயார்.

{kunena_discuss:794}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.