Cooking Tips # 12 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ்
தோசை வார்த்த பின்பு நேரமாகி காய்ந்துவிடாமல் இருக்க தோசையை சுட்டு பாத்திரத்தில் வைத்ததும் சில சொட்டு தண்ணீர் அதன் மீது தெளிக்கவும் மூடி வைக்கவும் பின்பு நேரம் கழிந்து திறந்தாலும் தோசை வறண்டு போகாமல் மெத்தென்று இருக்கும்
அரிசி ஊற வைத்த தண்ணீரில் பாகற்காயை கழுவினால் கசப்பு மறையும்
சிலருக்கு புளிச்சாதம், எலுமிச்சை சாதம் சாப்பிட்ட உடன் சிறிது நேரம் நெஞ்சு கரித்துக்கொண்டு இருக்கும் இவற்றை சாப்பிட்ட உடன் ஒரு டம்ளர் மோர் குடித்துவிட்டால் எளிதில் ஜீரணம் ஆகிவிடும்
வாழைக்காயை நறுக்கும் போது அதனின் பிசுபிசுப்பு கையில் ஒட்டாமல் இருக்க சிறிது தூள் உப்பை கையில் தடவிக் கொண்டு நறுக்கினால் பிசுப்பிசுப்பு ஒட்டாது
நெடுநாட்கள் வருமாறு போட்டு வைக்கும் ஊறுகாய்களை நான்கு நாட்களுக்கு ஒரு முறை கிளறி விட வேண்டும். இல்லையெனில் பூஞ்சை பிடித்துவிடும்
{kunena_discuss:794}