Cooking Tips # 17 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ்
மென்மையான சப்பாத்திகளை தயாரிக்க, மாவு எடுத்து, வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் சிறிது சூடான பால் சேர்த்து மாவை பிசையவும். மாவை அப்படியே 15 நிமிடங்கள் விட்டுவிட்டு, பின் சப்பாத்திகள் செய்யவும்.
பாலை கொதிக்க வைக்க அல்லது கீர் போன்ற பால் பயன்படுத்தும் சமையலுக்கு கனமான அடிப்பகுதி இருக்கும் பாத்திரத்தைப் பயன்படுத்துங்கள். பாலைச் சேர்ப்பதற்கு முன், பாத்திரத்தில் சிறிது தண்ணீர் சேர்த்தால்து, பால் அடிப்பிடித்து தீய்வதை தவிர்க்கலாம்.
அரிசி, ரவா, நட்ஸ், பயறு மற்றும் பருப்பு ஆகியவற்றை சமைப்பதற்கு முன்பு லைட்டாக வருது பயன்படுத்தினால் சுவை அதிகரிக்கும்.
சாதம் செய்யும் போது அரிசியில் சில சொட்டு எண்ணெயைச் சேர்த்தால் ஒட்டாமல் இருக்கும்.
பருப்பை வேகவைத்து மீதமான தண்ணீரை ரசம் செய்ய பயன்படுத்தலாம். அதேப்போல, காய்கறிகளை வேக வைத்த தண்ணீர் மீதம் வந்தால் சாம்பார் அல்லது மற்ற குழம்பு தயாரிக்க பயன்படுத்தலாம் அல்லது சப்பாத்தி மாவு பிசையவும் பயன்படுத்தலாம்.