(Reading time: 2 - 4 minutes)
Cooking Tips
Cooking Tips

Cooking Tips # 20 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ்

மிழ்நாட்டு சமையலில் தேங்காய்க்கு தனி இடம் உண்டு. நேரம் இருக்கும் போது முழு தேங்காயை துருவி ஃப்ரீசர் ட்ரேயில் வைத்து பிரீஸ் செய்து தேங்காய் க்யூப்களை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதை சிப்லாக் கவர் போல ஏதாவது கவரில் வைத்து பிரீசரில் வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும் ஒவ்வொரு க்யூபாக எடுத்து பயன்படுத்துங்கள்.

 

மென்மையான சப்பாத்திகள் வேண்டும் என்றால், ஒரு டீஸ்பூன் எண்ணெயை மாவில் சேர்த்து, மாவை வெதுவெதுப்பான நீரில் பிசையுங்கள். பிசைந்த மாவை மூடி, குறைந்தது 15 நிமிடங்கள் வைத்து பிறகு சப்பாத்தி செய்யுங்கள்.

 

புலாவ், பிரியாணி போன்ற உணவுகளுக்கு சாதம் வேக வைக்கும் போது,  அரிசியுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் எண்ணெய் ஆகியவற்றை சேருங்கள். இப்படி செய்தால் சாதம் ஒட்டிக்கொள்ளாமல் தனித்தனியாக இருக்கும், மென்மையாகவும் இருக்கும்.

 

சிவப்பு பீன்ஸ் (ராஜ்மா), கொண்டைக்கடலை போன்றவற்றை சமைக்கும் போது ப்ரெஷர் குக்கரை பயன்படுத்தினால், அதை வேக வைக்கும் போது உப்பு சேர்க்காமல் வேக வையுங்கள். இப்படி செய்தால் அவை நன்றாக வெந்து வரும்.

 

ருப்பு வேக வைக்கும் போது, தண்ணீரில் சில சொட்டு எண்ணெய் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்தால் பருப்பு வேகமாக வெந்து விடும்.

இப்படி பருப்பு வேக வைக்கும் போதும் கூடுதல் தண்ணீர் சேர்த்தால், அதைப் பயன்படுத்தி ரசம் அல்லது சூப் தயார் செயலாம்.

  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.