வீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 08 - சசிரேகா
சிறு குழந்தைகளின் துணிகள் மடித்து வைக்கும் கூடையில் ரசக்கற்பூரத்தை போட்டு வைத்தால் அந்த வாசனைக்கு எறும்பு, கரப்பான் பூச்சிகள் துணிகளை அண்டாது.
இரண்டு பல் பூண்டை நசுக்கி கொசுவர்த்தை வில்லை மேட்களின் மேலாக வைத்து சுவிட்ச் போடுங்கள் ரசாயண வாசனையால் வரும் சிக்கல்கள் ஏதுமின்றி கொசுவை விரட்டும் சிக்கனமான முறை இது பூண்டு வாசனையும் மிதமாகவே இருக்கும்
புது செருப்பு, ஷூக்கள் காலை கடித்தால் அதற்கு ஒரு கிண்ணத்தில் நல்லெண்ணெய் ஒரு ஸ்பூனும் தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூனும் கலந்து செருப்பு ஷூக்களின் உட்புறத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்தால் தோல் மென்மையாக இருக்கும் காலையும் கடிக்காது.
கொசுத் தொல்லை தீர 4 பூண்டை தோல் உரித்து ஜன்னலில் ஆங்காங்கே வைத்திட கொஞ்ச நேரத்தில் கொசுக்கள் அந்த இடத்தில் அண்டாது.
மின்சார அயர்ன் செய்யும் போது ஜரிகை உள்ள சேலைகளாக இருந்தால் அந்த ஜரிகை வழியாக மின்சாரம் பாயும் அதனால் அயர்ன் செய்யும் போது நம் உடம்பில் அந்த ஜரிகைகள் படாமல் சற்று தள்ளியிருந்து அயர்ன் செய்ய வேண்டும்
{kunena_discuss:747}