(Reading time: 2 - 4 minutes)

வீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 07 - இல்லத்தரசிகளுக்கு சில கூல் டிப்ஸ்

Home care tips

மெழுகுவர்த்தி பயன்படுத்தும் போது, மெழுகை வைக்கும் தட்டில் ஒரு சில சொட்டு தண்ணீர் தெளித்து விட்டு மெழுகை ஏற்றுங்கள். மெழுகு உருகி மரச்சாமான்கள் பாழாகுவதை தவிர்க்கலாம்.

 

முட்டை கீழே விழுந்து உடைந்து விட்டால், அதன் மேல் சிறிது உப்பு போட்டு விட்டு சிறிது நேரத்திற்கு பின் துடைத்து சுத்தம் செய்தால், சுத்தம் செய்வது சுலபமாக இருக்கும்.

 

ங்கள் வீட்டு ஜன்னல் ஓரங்களில் அலுமினியம் பயன்படுத்தப்பட்டு இருந்தால், அதன் மீது உப்பை தேய்த்து, ஈரத் துணியால் துடைத்து எடுத்தால் அழகாக பளபளக்கும்.

 

ரு கப் தண்ணீரில் கடுகு போட்டு, ப்ரிட்ஜில் வைத்தால், ப்ரிட்ஜில் இருந்து வரும் வாடைகள் நீங்கி விடும்.

 

லெதர் பர்ஸ்களை எலுமிச்சை பழம் கொண்டு தேய்த்தால் நல்ல ஷைனிங் கிடைக்கும்.

 

ழைய புகைப்படங்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டிருந்தால், அதை அப்படியே இழுத்து எடுத்தால் ஒன்று அல்லது இரண்டு போட்டோக்களும் பாழாகி விடும். எனவே ஹேர் ட்ரையர் கொண்டு மொத்தமாக காய வைத்தால், எளிதாக எடுத்து விடலாம்.

 

ன்னல் இடுக்குகள், கதவு ஓரங்கள் என அணித்து இடங்களிலும் மிளகுப் பொடியை தூவி வைத்தால், வீட்டிற்குள் எறும்பு வராது.

 

மைக்ரோவேவ் அவனில் அசைவ உணவுகளை சமைத்தால் அதன் வாசனை இருந்துக் கொண்டே இருக்கும். அதை போக்க லிக்விட் டிஷ் வாஷை ஒரு சின்ன பாத்திரத்தில் வைத்து 30 செகண்ட்ஸ் வைத்து எடுத்தால் அசைவ வாசனை ஓடியே போயிடும்!

 

துணிகளில் கிரீஸ் கரை பட்டுவிட்டால், பவுடரை போட்டு சில நிமிடங்கள் கழித்து சோப் தண்ணீரில் துவைத்தால் போய் விடும்.

 

ழுக்காக இருக்கும் சட்டை காலரில், சிறிது ஷாம்பூவை தடவி விட்டு பிரஷ்ஷால் தேய்த்தால் அழுக்குகள் போய் விடும்.

 

 

 {kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.