வீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 15 - சசிரேகா
துணி தோய்க்கும் போதும் சில சொட்டு ஷாம்பூ சேர்த்தால் துணியில் இருக்கும் வியர்வை நாற்றம் நீங்கி மணமாக இருக்கும் பளப்பளப்பும் மங்காது.
பளுப்பேறிய வாஷ்பேசின் அதை சுத்தமாக்க சிறிது வெந்நீருடன் விநிகர் மற்றும் உப்பை ஒரு டீஸ்பூன் அளவு கலந்து கழுவுங்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை செய்து வர பளிச்சென இருக்கும்.
உள்ளாடைகளை எப்போதும் நன்கு ஈரம் உலர்ந்த பிறகே அணிய வேண்டும் ஈரமாக இருந்தால் உடலில் இன்ஃபெக்ஷன் வந்துவிடும். உள்ளாடைகளுக்கு மட்டும் நீலம் போடக்கூடாது. தொடைப்பகுதியில் அரிப்புகள் ஏற்பட்டு இன்ஃபெக்ஷ்ன் வரலாம்
பாத்திரம் தேய்க்கும் போது மிகவும் பிசுபிசுப்பாக இருந்தால் ஒரு ஸ்பூன் வினிகரை பாத்திரம் தேய்க்கும் பவுடரோடு கலந்து தேய்த்தால் பளிச்சென்று இருக்கும்
கொசுவை விரட்ட உபயோகிக்கும் மேட் தீர்ந்துவிட்டதா கவலையில்லை முதல் நாள் உபயோகித்த மேட்டின் மேல் சில துளிகள் வேப்பெண்ணெயை விட்டு மறுபடியும் மிஷின் மேல் வைத்துவிடுங்கள் பின்பு ஆன் செய்யுங்கள் கொசு வராது
{kunena_discuss:747}