வீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 17 - சசிரேகா
நெயில்பாலீஸ் பாட்டிலின் விளிம்பில் ஒரு துளி வாஸலீனை தடவிவிட்டால் மூடி திறக்கும் போது சிரமம் இல்லாமல் இருக்கும்
துவைத்த துணிகளை காய வைப்பதற்கு முன் துணி உலர்த்தும் கொடியை ஒரு ஈரத்துணியால் நன்கு துடைத்துவிடுங்கள் இப்படி செய்வதால் கொடியில் இருக்கும் தூசுக்கள் துணியில் ஒட்டாது.
மங்கலாகி போன மூக்குக்கண்ணாடி மற்றும் முகம் பார்க்கும் கண்ணாடி பளிச்சென்று மாற வேண்டுமா நாம் பயன்படுத்தும் சென்ட்டில் இருந்து சில துளிகள் கண்ணாடியின் மேல் ஸ்ப்ரே செய்யுங்கள் பிறகு உலர்ந்த துணி அல்லது பஞ்சினால் துடைத்துவிட்டால் போதும் கண்ணாடி பளிச்சென்று இருக்கும்
கண்ணாடி பாட்டில் மூடிகளை திறக்க முடியவில்லையா கெட்டியாக உள்ளதா? கையில் விபூதியை நன்றாக தடவிக் கொண்டு திறந்தால் ஈசியாக திறக்க வரும்.
தயிர் புளித்த உடன் அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மொசைக் தரையில் கறை உள்ள இடத்தில் ஊற்றி சிறிது நேரம் கழித்து தேய்ந்து கழுவிவிடவும் தரை பளிச்சென்று இருக்கும்.
பாத்ரூமில் உள்ள தண்ணீர் தொட்டியின் உள்ளே சுண்ணாம்பு பூசாமல் சிமெண்ட்டின் பால் பூச்சே பூசலாம் ஏனெனில் சுண்ணாம்பு அடித்தால் சீக்கிரம் பாசி பிடிக்கும்
{kunena_discuss:747}