வீட்டுக் குறிப்புகள் - 19 - சசிரேகா
பால் தயிர் பாத்திரங்களில் நன்றாக பிடித்துவிட்டால் தேய்ப்பது கடினம் அதனால் அந்த பாத்திரத்தில் முக்கால்வாசி தண்ணீரை விட்டு கொதிக்க விட்டு அரை மூடி எலுமிச்சையை பிழிந்து மூடவும் 5 நிமிடத்தில் எல்லா கறைகளும் கரைந்து வந்துவிடும் பின் ஈசியாக பாத்திரத்தை தேய்த்துவிடலாம்
ஒரு பக்கெட் தண்ணீரில் ஒரு ஸ்பூன் கிளிசரினை கலந்து பட்டுத்துணிகளை அதில் முக்கி அலசி உலர்த்தினால் சுருங்காமல் இருக்கும். பட்டு இழைகள் விலகாமல் இருக்கும்
கால்கள் வாசற்படியைப் பார்த்தபடி நீட்டி படுத்து தூங்கக்கூடாது
சுவரோட ஒட்டிப்போட்ட படுக்கையில் படுத்தால் நிம்மதியான தூக்கம் வரும்
நாற்காலி, சோபா, கட்டில் ஆகியவைகளின் இடுக்கில் உள்ள அழுக்கைப் போக்க பழைய உதவாத டூத்ப்ரஷை பயன்படுத்த வேண்டும்
{kunena_discuss:747}