வீட்டுக் குறிப்புகள் - 20 - சசிரேகா
தரையை துடைக்கும் போது நீரில் மண்ணெண்ணெய் 2 சொட்டுகள் சேர்த்துக் கொண்டால் பூச்சி புழுக்கல் அண்டாது தரையில் உள்ள கறைகளும் நீங்கவிடும்
சட்டை காலரில் உள்ள அழுக்கு போக முதலில் அதை தண்ணீரில் நனைத்துவிட்டு வெளியில் எடுத்து அந்த இடத்தில் சிறிது சர்க்கரையை தேய்த்து விட்டு இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும் பிறகு தோய்த்தால் காலர் வெள்ளையாகிவிடும்
துணிகளில் எண்ணெய் கறையோ க்ரீஸ், தார் கறையோ பட்டுவிட்டால் அவற்றை துவைக்கும் போது சிறிது நீலகிரி தைலம் கொண்டு கசக்கி அலசினால் கறைகள் போய்விடும்
தலைமுடிக்கு டை தடவும் போது காதோரம் கறை பட்டுவிடும் உடனே பஞ்சை டெட்டாலில் நனைத்து கறைபட்ட இடத்தில் துடைத்தால் கறை போய்விடும்
ப்ரிட்ஜில் முட்டைகளுக்கு பக்கத்தில் எலுமிச்சை பழங்களை வைக்காதீர்கள் ஏனென்றால் எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலத்தன்மை முட்டைகளை கெடச்செய்துவிடும்
{kunena_discuss:747}