வீட்டுக் குறிப்புகள் - 21 - சசிரேகா
நாப்தலின் உருண்டைகளை பினாயில் பாட்டிலில் போட்டு வையுங்கள் இதை நீங்கள் வீட்டையும் குளியலறையும் பினாயில் கொண்டு சுத்தம் செய்யும் போது பூச்சிகள் அண்டாமல் இருக்கும்
பழைய அல்லது தீர்ந்துப் போன ஸ்டிக்கர் பொட்டு அட்டையை பாத்ரூம் கதவு மேற்புறமாக ஒட்டிவைத்தால் நாம் குளிக்கும் போது ஸ்டிக்கர் பொட்டை வேறு எங்கும் ஒட்டாமல் அந்த அட்டையிலேயே ஒட்டி வைத்து உபயோகிக்கலாம் சரும அலர்ஜி வராது
வெளியூர் செல்பவர்கள் தங்களுடைய லக்கேஜின் கைப்பிடியில் ஃப்ளாரசென்ட் நிறத்தில் ரிப்பனை கட்டிவிட்டால் கன்வேயர் பெல்ட்டில் வரும் போது சுலபமாக கண்டுபிடித்துவிடலாம். ட்ரெயினில் பயணப்படும் போதும் இதையே செய்தால் நமது லக்கேஜ்களை சுலபமாக எடுத்துக் கொள்ளலாம்
ஆனி ஆடி இரண்டு மாதங்களில் ஈக்கள் இனப்பெருக்கம் செய்யும் மாதங்களாகும் வீட்டின் தரையில் உப்பு நீரை தெளித்துவிட்டால் அல்லது உப்பு நீரால் தரையை துடைத்துவிட்டால் ஈக்களிடம் இருந்து தப்பலாம்
பால் காய்ச்சும் பாத்திரத்தையும் தயிர், மோர் வைக்கும் பாத்திரத்தையும் வேறு எதற்கும் உபயோகிக்க கூடாது. அப்போதுதான் அவை கெடாமல் மணமும் ருசியும் இருக்கும்
{kunena_discuss:747}