வீட்டுக் குறிப்புகள் - 22 - சசிரேகா
அரிசி மாவு கோலம் போடும் போது அந்த மாவில் ஒரு ஸ்பூன் மைதாவை கலந்துவிட்டால் கோலம் சீக்கிரம் அழியாமல் இருக்கும்
பலகாரம் செய்த பாத்திரங்களை முதலில் எலுமிச்சை பழத்தோலால் தேய்த்துவிட்டு அரப்பு தூள் தேய்த்து கழுவினால் எண்ணெய் பசை போய்விடும்
மாக்கோலம் போடும் மாவுடன் அரிசி வடித்த கஞ்சியை கலந்து கோலம் போட்டால் இழுத்த இழுப்பிற்கு அழகான கோடுகள் வரும் கோலமும் அழகாக இருக்கும்
சூடம் டப்பாவில் நெருப்பு திரியை போட்டு வைத்தால் விளக்கு வைக்கும் போது அந்த திரியை எண்ணெயில் போட்டு பற்ற வைத்தால் உடனே பற்றிக்கொள்ளும் எரியும் போது கமகமவென வாசம் வரும்
பூஜையறை மற்றும் வீட்டினுள் கோலம் போடுவதற்கு முன் தண்ணீரில் சில சொட்டுகள் பன்னீர் கலந்து அந்த தண்ணீரை தரையில் தெளித்து துடைத்தால் தரை பளிச்சிடும் அதன் மீது கோலம் போட வேண்டும் வீடும் பூஜையறையும் பன்னீர் வாசனையால் மணக்கும்
{kunena_discuss:747}