வீட்டுக் குறிப்புகள் - 46 - சசிரேகா
பாத்திரம் கழுவும் போது மிகவும் பிசுபிசுப்பாக இருந்தால் தேய்க்கும் பவுடருடன் வினிகரை சிறிது கலந்து தேய்த்தால் பிசுபிசுப்பு போய்விடும்
எவர்சில்வர் பாத்திரத்தை விபூதி கொண்டு வாரத்திற்கு ஒரு முறை நன்கு தேய்த்தால் பளபளக்கும்
குளிர் காலத்தில் துணிகளில் பூஞ்சை வாசனை அடிக்கும் அதற்கு எலுமிச்சை சாறு தண்ணீரில் ஊற்றி அந்த துணிகளை ஊற வைத்து அலசாமல் அப்படியே காய வைக்க வேண்டும் வாடை போய்விடும்
கோந்து பசை (gum) அதிகநாள் உபயோகிக்காமல் இருந்தால் இறுகிவிடும் அதில் சிறிதளவு வினிகரை சேர்த்தால் இளகிவிடும்
வீட்டில் பன்னீர் தயாரிப்பதாக இருந்தால் கொதிக்கும் பாலில் எலுமிச்சை சாறோ அல்லது தயிரோ எதை ஊற்றினாலும் கூடவே 2 டம்ப்ளர் குளிர்ந்த நீரை ஊற்றிவிடுங்கள் பின்பு வடிகட்டி வழக்கம் போல் பன்னீர் தயார் படுத்துங்கள் இப்படி செய்வதால் பன்னீர் வழக்கத்தை விட மிருதுவாக இருக்கும்.