(Reading time: 2 - 3 minutes)

வீட்டுக் குறிப்புகள் - 47 - அரிசி, மாவில் வண்டுகள் வராமல் இருக்க

ரிசி, மாவு போன்றவற்றில் வண்டுகள் வருவது என்பது ஒவ்வொரு இல்லத்தரசியும் எதிர்கொள்ளும் பிரச்சனை.

அந்த பிரச்சனைக்கு தீர்வு சொல்லும் சில வழிகளை இங்கே பார்ப்போம்:

 

புளியை வாங்கி வந்ததுமே அதிலுள்ள கொட்டைகளையும், நார்களையும் நீக்கிவிட்டு நன்கு வெயிலில் காய வைத்து சிறிது கல் உப்பு சேர்த்து ஜாடியில் போட்டு வைத்தால் ஓர் ஆண்டுக்கு மேல் புழுக்கள், பூச்சிகள் வராமலிருக்கும்.

  

ரைத்து வைத்திருக்கும் மாவில் வண்டுகளோ, பூச்சிகளோ வராமலிருக்க ஒரு சிறு துணியில் உப்பை வைத்து கட்டி மாவுக்குள் போட்டுவிட வேண்டும். இப்படி செய்தால் பூச்சிகள் வராது.

 

ளுத்தம் பருப்பை வாங்கியதும் அதை முறத்தில் போட்டு தட்டினால் மாவு மாதிரியான பொருள் வெளியேறும். தட்டிய பிறகு டப்பாவில் வைத்தால் வண்டு வராது.

  

னியா டப்பாவில் நாலைந்து துண்டுகள் அடுப்புக்கரியை போட்டுவைத்தால் வண்டுகள் அண்டாமல் இருக்கும்.

  

ரிசியில் மிளகாய் வற்றல் சிலவற்றைப் போட்டு வைத்தால் வண்டு பிடிக்காது.

 

துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பில் பூச்சி வராமல் இருக்க காய்ந்த வேப்பிலைகளையும்,  வசம்புத்துண்டுகளையும் போட்டு வைத்தால் போதும் பூச்சிகள் வராது.

  

பிரியாணி அரிசியில் சிறிதளவு உப்புத் தூள் கலந்து நிழலில் உலர்த்தி பிறகு டப்பாவில் போட்டு வைத்தால் வண்டுகள், பூச்சிக் கூடுகள் பிடிக்காது.

  

ர்க்கரை மற்றும் இனிப்பு வகைகளில் எறும்பு வராமலிருக்க நான்கைந்து கிராம்புகளை போட்டு வைத்தால் போதும் பூச்சிகள் வராது.

 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.