செடிகளும் நம் குழந்தைகள் தான்!
வளர்ப்பு பிராணிகளைப் போலவே நாம் வளர்க்கும் செடிகளும் நம்முடன் பாசமும் நட்பும் பிரதிபலிக்க கூடியவை.
நாமும் அவற்றை அக்கறையுடன் பேணி பாதுகாக்க வேண்டும்.
1)தேவைக்கு அதிகமாக தண்ணீர் ஊற்றாதீர்கள்
செடிகளை வளர்க்கத் தொடங்கும் போதே அவற்றுக்கு எவ்வளவு தண்ணீர் தேவைப் படும் என்பதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
மழைக்காலம் மற்றும் கோடைக்காலத்தில் செடிகளுக்கான தண்ணீர் தேவை வேறுப்படும் என்பதை உணர்ந்து அவற்றுக்கு தண்ணீர் ஊற்றுங்கள்.
2)சரியான இடத்தில வையுங்கள்
ஒவ்வொரு செடிக்கும் ஒவ்வொரு விதமான சூரிய ஒளி தேவைப்படும். எனவே உங்கள் செடிக்கு எந்த அளவுக்கு சூரிய ஒளி தேவைப்படும் என்பதை புரிந்துக் கொண்டு, சரியான இடத்தில அதை வையுங்கள்.
3) மண்ணில் கவனம் செலுத்துங்கள்
நீங்கள் நல்ல தரமான மண்ணைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேல் இருக்கும் மண்ணை பத்து நாட்களுக்கு ஒரு முறை ஒரு குச்சி அல்லது முட்கரண்டி கொண்டு கிளறி விடுங்கள்.
4) சமையலறை கழிவுகளைப் பயன்படுத்துங்கள்
உங்கள் சமையலறையிலிருந்து வெளியேறும் எந்தவொரு கரிமமும் உங்கள் செடிகளுக்கு ஊட்டச்சத்து கொடுக்கும். பயன்படுத்தப்பட்ட தேயிலை இலைகள், காபி, தூள் செய்த முட்டைக் ஓடுகள், வாழைப்பழத் தோல்கள் என அனைத்தும் உங்கள் செடிகளுக்கு பயனுள்ள ஊட்டச்சத்துக்களை வழங்கும். மேலும் தானியங்கள், பயறு வகைகள் மற்றும் காய்கறிகளை கழுவ நீங்கள் பயன்படுத்தும் தண்ணீரை செடிகளுக்கு ஊற்ற பயன்படுத்தலாம்.
5) களைகளை அகற்றுங்கள்
களைகள் மற்றும் கம்பளிப்பூச்சி போன்ற பிற பூச்சிகள் மீது கவனம் வையுங்கள். வேம்பு ஒரு இயற்கையான பூச்சிக்கொல்லி மற்றும் பூஞ்சை கொல்லியாக செயல்படுகிறது. எனவே உங்கள்