வீட்டில் தக்காளி விதைகள் நட்டு செடி வளர்க்க சில டிப்ஸ்
தக்காளி பொதுவாக கோடை காலத்தில் வருடாந்திரமாக வளரும் செடி. எனவே தக்காளி விதைகளை மார்ச் முதல் ஜூன் வரை வீட்டுக்குள் இருக்கும் தொட்டியில் விதைக்க தொடங்க வேண்டும்.
தக்காளி விதைகளை 3 முதல் 4 அங்குல ஆழத்தில் சிறிய தொட்டிகளில் நடவும்.
கனமான களிமண் மண்ணைத் தவிர வேறு எந்த வகையான தோட்ட மண்ணிலும் தக்காளி வளரும்.
தக்காளி விதைகள் முளைக்க தேவையான சிறந்த வெப்பநிலை 21 முதல் 27 டிகிரி செல்சியஸ் (70 முதல் 80 ℉) வரை இருக்கும்.
தக்காளி விதைகள் நன்கு வளர அவற்றை சூடான மற்றும் இருண்ட இடத்தில் வைக்கவும். பொதுவாக விதைகளில் இருந்து செடி 10 முதல் 14 நாட்களில் தோன்ற வேண்டும்.
ஆரோக்கியமான தக்காளி செடியை வளர்க்க, தக்காளிக்கு ஏற்ற அளவு மண்ணின் ஈரப்பதத்தை பராமரிப்பது அவசியம்.
தக்காளி விதைகள் முளைக்கும் வரை மிகக் குறைவான தண்ணீர் தேவைப்படுகிறது. எனவே மண்ணின் மேற்புறத்தை ஈரப்பதமாக வைக்க கொஞ்சமாக தண்ணீரை தெளித்தாலே போதும். ஒருவேளை தொட்டியில் இருக்கும் மண்ணின் ஈரப்பதம் அதிகமாகிவிட்டதாக தோன்றினால், செடியை காற்றோட்டத்துடன் இருக்கும் பகுதியில் தற்காலிகமாக வைக்கவும்.