உங்கள் வீட்டு தோட்டத்தில் மல்லிகைச் செடி வளர்க்க சில டிப்ஸ்
மல்லி பூ செடிக்கு செம்மண் மிகவும் சிறந்தது
மல்லி பூ செடியை நன்றாக வெயில் படும் இடத்தில் வைத்து வளர்த்தால் செடி நன்றாக வளரும்.
மல்லி செடிக்கு வெயில் காலத்தில் காலை அல்லது மாலை ஏதாவது ஒரு வேளையில் தண்ணீர் ஊற்ற வேண்டும். குளிர் காலம் மற்றும் மழை காலங்களில் செடியை சுற்றி இருக்கும் மண்ணின் ஈரப்பதம் பொறுத்து, தேவை என்றால் மட்டும் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
பொதுவாக செடியாக இல்லாமல் கொடி வகை மல்லிகை செடிகள் நன்றாக பூக்கள் பூக்கும். எனவே அதிக பூக்கள் வேண்டுமென்றால் மல்லிகை கொடியை வாங்கி வளருங்கள்.
மல்லிச்க் செடிக்கு உரமாக காய்கறி கழிவுகள், டீத்தூள், முட்டை ஓடு, வாழைப்பழ தோல் போன்று அனைத்து வகை இயற்கை உரங்களையும் பயன்படுத்தலாம்.