(Reading time: 2 - 3 minutes)

தோட்டக்  குறிப்புகள் - மழைக்காலத்தில் வீட்டில் வளர்க்கக் கூடிய 5 காய்கறிகள்

ருவ மழையின் ஈரப்பதம் நிறைந்த காலநிலையில் பல்வேறு செடிகள், காய்கறிகள் நன்றாக வளரும்.

அப்படி சமையலறை, பால்கனி அல்லது ரூப்பில், எளிதாக வளர்க்கக் கூடிய சில காய்கறிகள் இதோ.

 

வெண்டக்காய்:

ஈரப்பதம் நிறைந்த காலநிலை வெண்டக்காய் செடி வளர்க்க சரியான சீசன்.

இந்த செடியின் விதைகள் முளைக்க 5 முதல் 6 நாட்கள் வரை ஆகும்.  காய்கறி முதிர்ச்சியடைய 55 முதல் 65 நாட்கள் ஆகும்.

 

ஸ்பினாச்:

இது அதிக சத்தான கீரை வகை. இதில் வைட்டமின்கள் ஏ, சி, கே மற்றும் தாதுக்கள் மெக்னீசியம், இரும்பு மற்றும் மாங்கனீசு ஆகியவை இருக்கிறது.

மழைக்காலத்தில் இருக்கும் குறைந்த வெப்பநிலை கீரை செடியின் வளர்ச்சியை எளிதாக்குகிறது.

விதை விதைத்து கீரையை அறுவடை செய்ய 6 வாரங்கள் தேவை.

 

வெள்ளரிக்காய்:

இந்த செடி வளர நல்ல மண், சூரிய ஒளி மற்றும் நிறைய ஈரப்பதம் மட்டும் போதுமானது.

வெள்ளரி செடி வளர்ந்து காய்கறி உற்பத்தி செய்ய 55 முதல் 70 நாட்கள் தேவை.

 

கத்திரிக்காய்:

பொதுவாக கத்தரிக்காய்கள் வளர அதிக இடம் தேவை. ஆனால் பெரிய தொட்டி இருந்தால் அதை உங்கள் பால்கனியிலும் வளர்க்கலாம்.

இந்த செடி செழிக்க நிறைய சூரியன் தேவைப்படுகிறது.

தினமும் தண்ணீர் ஊற்றுவது அவசியம். விதைகள் முளைக்க பொதுவாக 2-3 வாரங்கள் தேவைப்படும்.

 

கேரட்:

இந்த செடிக்கு நேரடி சூரிய ஒளியும், சற்றே குளிர்ந்த மண்ணும் தேவை.

ஆகஸ்ட் மாதத்தில் நடுவது சரியாக இருக்கும்.

செடி முளைக்க மூன்று வாரங்கள் வரை எடுக்கும்.

 

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.