TV Serials - வைதேகி காத்திருந்தாள் - Vijay TV
விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் தொடங்கி இருக்கும் புதிய சீரியல், வைதேகி காத்திருந்தாள்.
இந்த சீரியலில், செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் சின்னத்திரையில் “நெஞ்சம் மறப்பதில்லை” தொடர் மூலம் புகழ்பெற்ற சரண்யா, வைதேகி என்ற டைட்டில் கேரக்டரில் நடித்திருக்கிறார். ப்ரஜின் இந்த தொடரில் ஹீரோவாக நடிக்கிறார். அவர்களைத் தவிர, லதா, யமுனா சின்னதுரை, யோகேஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
வைதேகி காத்திருந்தாள் கதை சுருக்கம்:
அமுதநாயகியின் பேத்தி வைதேகி சிறு வயதிலேயே ஒரு திருவிழாவில் காணாமல் போகிறாள்.
காணாமல் போன அந்த வைதேகியாக நடித்துக் கொண்டு அமுதநாயகியின் பணக்கார பண்ணை வீட்டுக்குள் நுழைகிறார் பூர்ணிமா. பண்ணை சொத்துக்களை அபகரிக்க திட்டமிடும் அவருக்கு பின்னால் ஒரு ஏமாற்று கூட்டமே இருக்கிறது.
ஆனால் அந்த வீட்டுக்குள் நுழைந்தப் பிறகு தான் காணாமல் போன வைதேகியே பூர்ணிமா தான் என்று தெரிய வருகிறது.
உண்மை தெரிந்தப் பிறகு, பிரச்சனைகளை வைதேகி எப்படி சமாளிக்கிறார் என்பது தான் சீரியலின் கதை.