குடும்பம் - குடும்பத்தில் தகராறு - சசிரேகா
கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறுகள் வந்தால் குடும்பத்தின் அமைதி கெட்டுப்போகும்.
தகராறு வருவதை முன்பாக அறிந்து தகராறுகளைத் தவிர்த்தால் குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சி இருக்க வாய்ப்பு இருக்கிறது.
புதிதாக மற்றொரு பிள்ளை பிறக்கும் போது குடும்பத்தில் அமைதி குறையும், இந்த நேரத்தில் கணவன் கொஞ்சம் அக்கறையுடன் கவனத்துடன் எல்லாரையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கணவனுக்கோ மனைவிக்கோ தூக்கம் இல்லா விட்டாலும், களைப்பு மிகுதியாக இருந்தாலும், உடல் நலம் கெட்டாலும், வாழ்க்கையில் சலிப்பு ஏற்பட்டாலும் தகராறுகள் முற்றும்.
அப்போது கணவனோ மனைவியோ பக்குவமாக நடந்துக் கொள்ள வேண்டும்.
எந்தக் குடும்பத்தில் நடந்து கொள்ளும் பக்குவம் குறைகிறதோ அந்தக் குடும்பத்தில் தகராறுகள் ஏதாவது இருந்து கொண்டேதான் இருக்கும்
{kunena_discuss:747}