தாய் தன் சேய்யை தன் கருவில் சுமக்கும் நாளில் ஆரம்பித்து, பிரசவிக்கும் வரையில் வயிற்றிலும், நெஞ்சிலும் தாங்கி , பின்னும் தன் வாழ்வையே அந்தக் குழந்தையைச் சுற்றி அமைத்துக் கொள்ளும், தாய்க்கு நிகர் யாரோ. ஒரு குழந்தைக்கு தாயே இப்படி என்னும் போது, சகல உயிர்களுக்கும் தாயானவள் இரக்கம் கொள்ளவில்லையெனில் அவள் மக்களின் கதி என்னவோ. அவளைப் பற்றிக் கவி பாடும் புலவர்க்கும், ஞானியர்க்கும் அவளின்றி கதி யாரோ?
இப்படிப்பட்ட வரிகளைக் கொண்ட இப்படாலை உணர்வுப் பூர்வமாக உணரவும், எம்.எஸ். அம்மாவின் குரலில் கேட்பதிலும் உள்ள ஆனந்தம் வேறு உண்டோ.
விஜயதசமியான இன்று நாம் புதிதாக ஆரம்பிக்கும் எந்த ஒரு காரியமும் வெற்றி உண்டாகவும்,, நாம் ஏற்கனவே செய்யும் காரியங்களிலும் மேலும் மேலும் வெற்றி வந்து சேரவும் தேவியரின் அருள் கிடைக்க பிரார்த்திப்போம்.
சில்சீ வாசகர்கள், எழுத்தாளர்கள் , டீம் அனைவருக்கும் இனிய விஜயதசமி , ஆயுத பூஜை வாழ்த்துக்கள்.
ராகம்: அடானா
தாளம்: ஆதி
நீ இரங்காய் எனில் புகல் ஏது? – அம்பா
நிகில ஜகன்னாதன் மார்பில் உறை திரு
(நீ இரங்காய் எனில்)
தாய் இரங்கா விடில், சேய் உயிர் வாழுமோ?
சகல உலகிற்கும் நீ, தாய் அல்லவோ அம்பா?
(நீ இரங்காய் எனில்)
பாற்கடலில் உதித்த திருமகளே – செள
பாக்ய லட்சுமி என்னைக் கடைக்கணியே
நாற்கவியும் பொழியும் புலவோர்க்கும் – மெய்
ஞானியர்க்கும் உயர் வானவர்க்கும் அம்பா
(நீ இரங்காய் எனில்)
லிங்க் இதோ ..
மீண்டும் சந்திப்போம்.