(Reading time: 2 - 3 minutes)

அழகு குறிப்புகள் # 50 - தலை முடி பராமரிப்பு: அடங்க மறுக்கும் தலை முடிக்கான தீர்வு

டங்காமல் இருக்கும் தலை முடி (frizzy hair) என்பது நம்மில் பலரும் இன்று சந்திக்கும் ஒரு பிரச்சனை.

  

இப்படி இருக்கும் முடியை கட்டுப்படுத்தி தலை வாருவது என்பது அதிக நேரம் எடுக்கும்.

  

இந்த பிரச்சனை வருவதற்கு முக்கிய காரணம் உங்கள் தலைமுடியில் வேண்டிய ஈரப்பதம் இல்லாமல் போவது தான்.

  

சிலர் இது இயற்கையாகவே அமைந்திருப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள். அது தவறு. நம் தலை முடியை சீராக பராமரிக்க தவறும் போது தான் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

 

இப்படி பட்ட தலை முடி பிரச்சனையை சமாளிக்க, அழகு சாதனங்கள் வாங்கி நீங்கள் பெரிய தொகையை செலவிட தேவையில்லை.

இந்த பிரச்சினைக்கு தீர்வு நம் சமையலறையிலேயே இருக்கிறது.

 

முட்டை மற்றும் பாதாம் எண்ணெய்

ஒரு கிண்ணத்தில் 1 முட்டை மற்றும் 1/4 கப் பாதாம் எண்ணெய்யை ஒன்றாக கலக்கவும்.

 

இரண்டையும் நன்றாக கலந்து உங்கள் தலைமுடியில் தடவவும்.

  

எண்ணெய் கலவை உச்சந்தலையில் படுமாறு நன்கு தடவவும்.

 

40 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, பின்னர் சல்பேட் (sulfate) இல்லாத ஷாம்பூவைப் பயன்படுத்தி தலை முடியை கழுவ வேண்டும்.

பின் கண்டிஷனரைப் பயன்படுத்துங்கள்.

  

வாரத்திற்கு ஒரு முறை இதை செய்தால் உங்கள் தலை முடி அழகு பெறும்.

 

பாதாம் எண்ணெய் உங்கள் தலைமுடியை மென்மையாக்கும். முட்டைகளில் உள்ள புரதம் முடி வேரில் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்யும்.

  

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.