அழகு குறிப்புகள் # 51 - கண்ணை சுற்றி இருக்கும் கருவளையங்களில் இருந்து விடுப்பட
உங்கள் கண்களைச் சுற்றியுள்ள கரு வளையங்கள் உங்கள் முகத்தின் அழகை குறைத்து காட்டும்.
இது தெரிந்திருந்தாலும் மக்கள் அப்படி கரு வளையங்கள் வரும் வாழ்கையை முறைகளை தான் தொடர்ந்து பின்பற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.
கருவளையங்கள் வருவதற்கான காரணங்கள்:
போதுமான தூக்கம் இல்லாமை, புகை பிடித்தல், குடிப்பழக்கம், சோர்வு, அதிக மன அழுத்தம் போன்றவை கரு வளையங்கள் வரவழைக்கும்.
இந்த கருவளையங்களில் இருந்து விடுப்பட பாதாம் எண்ணெய் சிறந்த தீர்வாகும்.
ஈரப்பதம் நிறைந்த பாதாம் எண்ணெயை தவறாமல் பயன்படுத்துவதால் உங்கள் கண்களைச் சுற்றியுள்ள சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.
பாதாம் எண்ணெய் & தேன்
அரை டீஸ்பூன் பாதாம் எண்ணெய் & தேன் எடுத்து நன்கு கலக்கவும். இந்த கலவையை தூங்குவதற்கு முன் பாதிக்கப்பட்ட பகுதியில் தடவவும்.
ஒவ்வொரு இரவும் இதைச் செய்வது உங்கள் சருமத்துக்கு ஈரப்பதமும் கொடுக்கும், இளமையாகவும் வைத்திருக்கும்.
தேனும் சருமத்திற்கு ஈரப்பதம் கொடுத்து, மென்மையாக்கும். அதே நேரம், சுருக்கங்கள் வருவதையும் தடுக்கும்.
பாதாம் எண்ணெய் & பன்னீர்
பன்னீரை பஞ்சில் நனைத்து கண்களுக்கு கீழே தடவவும். அது உலர்ந்த பின்னர் பாதாம் எண்ணெயை தடவவும்.
2 நிமிடங்கள் மசாஜ் செய்து இரவு முழுக்க விட்டு விடுங்கள்.
சருமத்திற்கு நலம் தரும் பண்புகளைக் கொண்டிருப்பதால், பன்னீர் கருவளையத்தை மாற்றும்.
ஆலிவ் எண்ணெய் & பாதாம் எண்ணெய்
இரண்டு எண்ணெய்களிலும் அரை டீஸ்பூன் எடுத்து நன்கு கலக்கவும்.
உங்கள் கருவளையங்கள் மற்றும் கண் இமைகளில் எண்ணெய் கலவையை கவனமாக தடவவும்.
2 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். முழு இரவும் விட்டு விடுங்கள்.
லினோலிக் அமிலங்கள் மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருப்பதால் ஆலிவ் எண்ணெய் உங்கள் கண்களுக்குக் கீழே உள்ள சருமத்தை மாற்ற உதவும்.