(Reading time: 2 - 4 minutes)

அழகு குறிப்புகள் # 68 - அரிசி ஊற வைத்த நீர் – உங்கள் சருமத்திற்கு மிகவும் நல்லது

மைக்கும் போது அரிசி ஊற வைத்த தண்ணீரை கீழே கொட்டாதீர்கள். அந்த தண்ணீர் உங்களுக்கு தெளிவான, பிரகாசமான சருமத்தை கொடுக்க கூடியது!

அரிசி ஊற வைத்த அரிசி நீர் எக்சீமா, வறண்ட சருமம், வெயிலினால் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகள் என பலவற்றிற்கு சிகிச்சையளிக்கும் அற்புதமான நன்மைகளைக் கொண்டுள்ளது.

இந்த தண்ணீரில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்களால் நிரம்பியுள்ளது, அவை ஆரோக்கியமான சருமத்தை பராமரிக்க மிகவும் அவசியமானவை.

ஜப்பானியர்கள் பல நூற்றாண்டுகளாகவே தங்கள் அழகு நடைமுறைகளில் அரிசி நீரைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

 

முகத்திற்கான க்ளென்சர் & டோனர்

அரிசி நீர் சருமத்தில் உள்ள துளைகளை சிறியதாக்குவதன் கூடவே சருமத்தை சுத்தப் படுத்தவும் செய்கிறது.

 

இந்த அரிசி தண்ணீரை ஒரு காட்டன் பாலில் தொட்டு உங்கள் சருமத்தில் தடவி, உலர விடுங்கள்.

 

இதை செய்வதால் உங்கள் சருமம்,

பிரகாசமாகும்,

மந்தமான தன்மை நீங்கும்,

ஈரப்பதமாகும்,

வயதான அறிகுறிகளை எதிர்த்துப் போராடும்.

சருமத்திற்கான சிகிச்சை

அரிசி நீர் மாவுச்சத்து கொண்டது. அதனால் எக்சீமா போன்ற சரும வியாதிகளால் ஏற்படும் எரிச்சலை ஆற்ற உதவுகிறது.

உங்களுக்கு எக்சீமா அல்லது பிற தோல் அழற்சி இருந்தால், அரிசி நீரை ஒரு சுத்தமான துணியில் நனைத்து, பாதிக்கப்பட்ட சருமத்தில் அந்த ஈரமான துணியால் மென்மையாக துடைக்கவும்.

இதை சில நிமிடங்கள் செய்து, பின்னர் அந்த பகுதியை உலர விடவும்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.